Monday, 1 December 2025

சபரி மலை சரணம்.



சபரிமலை வாழும் நீ
சாமி ஐயப்பா-உன்
சரணக்கலை நாடிவாரேன
சாமி ஐயப்பா!
பள்ளிக்கட்டுக் கட்டிக்கிட்டு
சாமி ஐயப்பா--பேட்டைத்
துள்ளி ஆடி வாரேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

பதினெட்டு மலைதாண்டி
சாமி ஐயப்பா!
பதினெட்டுப் படியேறி
சாமி ஐயப்பா!
கதியென்று உனைவேண்டி
சாமி ஐயப்பா
அருளென்று தேடினேன்
சாமி ஐயப்பா!
விரதம் ஏற்று நடந்து வாரேன்
சாமி ஐயப்பா---உன்னால்
சாதி மதம் மறந்துவிட்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா"
சரணம் ஐயப்பா!

சரணம் சரணம் கூறிக்கொண்டு
சாமி ஐயப்பா!
உச்சிமலை ஏறிவந்தேன்
சாமி ஐயப்பா!
எண்ண மெல்லாம் வாழும் நீ
சாமி ஐயப்பா!
எனக்குள்ளே கண்டு கொண்டேன்
சாமி ஐயப்பா!--உன்னால்
சமத்துவம் பழகிக்கொண்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

சாமிசாமியே! சரணம்சரணமே!
சாமியெல்லாமே!சகலமெல்லாமே!
ஐய்யன்ஐய்யனே!மெய்யன்மெய்யனே!
அகிலமெல்லாமே!அன்பிலெல்லாமே!

துளசிமாலை சத்தியமா போடுவேன்.
பழகிப் போச்சு நிதமுன்னைப் பாடுவேன்
சாமி சாமி சாமினு சொல்லிச் சொல்லி
சாமி ஆயிட்டேன்
சரணம் சரணம் சரணஞ் சொல்லி
சரணடைஞ் சிட்டேன்.
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா!சாமி ஐயப்பா!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment