Sunday, 28 December 2025

இரத்தம்

இரத்தம்.

பிறந்த பொழுதிலே பிறந்த பாசங்கள

வளர்ந்த பாதையில் கலைந்த வேஷங்கள்.

இரத்தம் ஒன்றிலே உதித்த உறவுகள் 

பிரிந்து சிதைவதோ அண்ணன் தம்பிகள்!


துணைக்குத் துணையாய் வாழத் தானடா!

நினைத்துப் பெற்றாள் அன்னை அவளடா!

அண்ணன் தம்பியாய் இணைந்த உறவுகள் 

மண்ணு வாசல்களாய் பிரிந்ததும் ஏனடா!


உரிமைகள் மாறும் மண்பொருளுக் காக

பிறவிகள் பாசம் தான்பலி யாச்சோ!

பங்காளி என்றால் பகையாளி தானோ!

சங்கதி இதுவானால் சகோதரர் எதற்கோ!


தாயின் மார்பிலே குடித்த பாலுக்கு 

தன்னுரிமைச் சண்டைகள் செய்தோமா!

தாயின் வயிற்றிலே வாழ்ந்த  கருவறை,

 தனித்தனி பங்கும் பிரித்தளந் தோமா!


ஒற்றுமை சொல்லியே தாய் ஊட்டி வளர்த்தாள்.

வேற்றுமை இன்றியே விளையாடி மகிழ்ந்தோம்.

நாய்களின் குணமோ தெருச்சண்டை ஏனோ!

தாய்ப்பால் இரத்தம் சிந்திட லாமோ!


குடும்பங்கள் ஆனது குலம் பெருகத் தானே!

கோடுகள் பிரிக்கும் பாகங்கள் எதற்கோ!

தாயவள் போலவே தாரமும் அணைத்தால்

 சேய்களாய் மீண்டும் சோதரர் ஆவோம்.


கொ.பெ.பி.அய்யா.



Saturday, 27 December 2025

மலையாம் மலையாம் சாமி மலையாம்

மலையாம் மலையாம் சாமி மலையாம்
 மலையாம் மலையாம் சாமி மலையாம்
ன சாமி சபரி மலையாம்__அது
ஐயப்பன் வாழும் மா மலையாம்__அந்த
மெய்யப்பன் தானருள் செய்யப்பனாம்.

விரத மிருந்து இருமுடி கட்டி
வரம் பெற ஐயனின் கோவிலை நாடி
வாபரைத் தொழுது சாபங்கள் கலைந்து
வழிப் பயணம் தொடர்வோம் விழைந்து.

ஏற்றங்கள் ஏறி ஆறுகள் மூழ்கி
பாவங்கள் கழுவி பம்பா நீங்கி
சாமிகள் கூடி சரணம் பாடி
சத்தியப் பயணம் சாஸ்தாவைத் தேடி.

விசாக மாதம் மண்டல பூஜை
விரதமிருந்து கண்டிட ஆசை.
நெய்யபிசேகம் செய்திடும் வாசம்.
வைகாசி நாளில் தொடங்கிடும் கோசம்.

உசபூஜை உச்ச பூஜை படிபூஜை என்று
உவந்து கண்டு அத்தாழ பூஜையும்  அடைக்கும் முன் நடைவாசல் நின்று
ஐயனின் அருளைப் பெறுவோம் மகிழ்ந்து

பந்தள ராஜன் பால்முக வாசன்
கந்தன் சகோதர கருணை பூசன்
உறுவினை யாவும் அவனால் அகன்று
பிறவிப் பயனை அடைவோம் நெகிழ்ந்து.

கார்த்திகை மாதம் நேர்த்தியாய் விரதம்
சாஸ்தாவைக் காண சபரிக்குப் பயணம்.
ஏழுமலை களும் ஏழு பிறவிகளாம்
அழுதா நதியில் கழுவிக் கடப்போம்.

தைத் திங்கள் முதல் நாள் பொன்னம்பலம் மேட்டில்
மகர ஜோதியாய் ஐயப்பன் தரிசனம்
தவர விடலாமோ  நெய்யப்பன் கரிசனம்.

ஐயப்பனை நம்பினார்கு ஐயமில்லை
மெய்யப்பன் சன்னதியே எல்லை.
சாமிசரணம் சொன்னாலே போதுமே
சங்கடங்கள் தீர்ந்தெல்லாம் சுபமாகுமே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Wednesday, 17 December 2025

சாமிகளே சாமிகளே

சாமிகளே சாமிகளே 

சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க.
சபரிமலை பாட்டுப் பாடி ஆட்டம் போடுங்க. 
ஐயப்பா ஐயப்பா கைகள் தட்டுங்க.
ஆடிப் பாடி தாளம் கொட்டிப் பாட்டுப்
பாடுங்க.

குதுகலமா கொண்டாட்டமா கோசம் 
போடுங்க.
கூட்டமாகக் கூடிச்சேந்து பஜனை பாடுங்க.
அந்தவினை இந்தவினை எந்தவினை ஆனாயென்ன.
ஐயப்பனுக்கு மாலை போட்டா பொய்யாப் போகுங்க.

சோதனையா வேதனையா ஏதும் இல்லீங்க.
சொந்தம் பந்தம் எல்லாமே வந்து சேரூங்க.
தொலைஞ்சு போன எல்லாமே துலங்கும்
பாருங்க.
கலைஞ்சு போன சந்தோசமும் கூடி வரூங்க.
ஐயப்பனுக்கு மாலை போட்டா எல்லாம் கூடுங்க.

வீடு வாசல் காடு மனைகள் எல்லாமே

ஆடுமாடுகள் தேடுஞ் சுகங்கள் எல்லாமே
செய்யுந் தொழில்கள் சேவைகள் எல்லாமே.
தொய்யா நலமே தொடரும் எல்லாமே.
ஐயப்பனுக்கு மாலை போட்டா எல்லாமே
வாழுமே.

சொந்த வீடு சொந்தத் தொழில் சொந்தமே எல்லாமே.
சொந்தங்கள் பந்தங்கள் சுகமாக எல்லாமே.
சொந்த முனு எண்ணுவது எல்லாமே சொந்தமே.
வந்தவினை எல்லாமே வந்த வழி போகுமே.
ஐயப்பனுக்கு மாலை போட்டா ஆகாதே
இல்லையே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


சபரிமலை கோசம்

கார்த்திகை பிறந்திரிச்சி 

கார்த்திகை பிறந்திரிச்சி 
கவலை யெல்லாம் 
மறந்திரிச்சி.
ஆலயங்கள் விழிச்சிரிச்சி
ஆலய மணிகள் ஒலிச்சிரிச்சி
விடியல் வெளிச்சம் தெரிஞ்சிரிச்சி.
ஐயப்பா கோசங்கள்
அகிலமெங்கும் முழங்கிரிச்சி.

சந்தன வாசம் மணந்திரிச்சி
சாஸ்தா கோசம் கேட்டிரிச்சி
வந்தனம் கூறி வீதிகளெல்லாம்
வாழ்த்தொலி முழக்கம் நிறைஞ்சிரிச்சி.
விரதமிருக்கும் பக்தர்கள் கூட்டம்
சரணகோசங்கள் பாடியே
தெருக்களில் வரிசைகள் தொடர்ந்திரிச்சி.

சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா 
வீதி யெங்கும் வாழ்த்துக்கள் 
கோவி லெங்கும் பாடல்கள் 
மாலை போடும் மாட்சிகள் 
காலை முதலேக் காட்சிகள் 
பக்திமயமாய் பஜனைகள்
பக்க வாத்தியங்கள் இன்னிசைகள்.

ஊரெங்கும் குரலோசை
பாரெங்கும் மணி யோசை
ஆலய மெங்கும் பூஜைகள்
ஐயப்பன் புகழ் பாடும் ஓசைகள்.
சரண கீதங்கள் சாஸ்தாவின் வேதங்கள்
சாமி ஐயப்பா சாமி ஐயப்பா
சங்கீத வசனங்கள்
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
தெருவீதிப் பாட்டுக்கள்.

சந்தனம் குங்குமம் வாசமே
வந்தனம் பொங்கும் கோசமே
மாலை மலர்கள் மணமே
காலைப் பொழுதின் காட்சிகள்.
சபரிமலைப் பயண மந்திரங்கள்
சாஸ்தா வழிப்பயண தந்திரங்கள் 
அதிகாலைக் குளியல்கள்
ஆரோக்கிய வழிபாடு
விதிப்பலம் நிலைப்பாடு.

கார்த்திகை பிறந்திரிச்சி 
கவலை யெல்லாம் 
மறந்திரிச்சி.
ஆலயங்கள் விழிச்சிரிச்சி
ஆலய மணிகள் ஒலிச்சிரிச்சி
விடியல் வெளிச்சம் தெரிஞ்சிரிச்சி.
ஐயப்பா கோசங்கள்
அகிலமெங்கும் முழங்கிரிச்சி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 16 December 2025

ஹரிஹரபுத்திரன்

சாமி ஐயப்பா.

அரிஹர புத்திரன் கிரிதரன் ஐயப்பன் 
சபரி மலையின் சாஸ்தா ஐயப்பன் 
பந்தள ராஜன் பரிசென ஐயப்பன் 
சொந்தம் பக்தர்க்கு சுபந்தரும் ஐயப்பன் 

அவதார புருஷன் அரக்கியின் தும்சன்
தவக்கோலம் பூண்ட சபரி வாசன். யோகப் பட்டம் காலில் கட்டி 
தவயோகி யானான் சபரிமலை நேசன்.

சீதையைத் தேடிய சீதா இராமன்
சபரி ரிசியைச் சந்தித்தான் பசியில் 
நெல்லிக் கனிகளை சுவைத்துத் தேர்ந்து 
அள்ளிக் கொடுத்தாள் சபரி ரிசியாள்.

சபரி ரிசியாள் தவமிருந்த மலைதான்
சபரிமலை யாம் சாமி மலையாம். 
ஐயப்பா சாமியும் அதைத்தான் தேர்ந்து
தவம் மேற்கொண்டார் மணிகண்டனாக.

மோகினி யான ஹரிமேல் மோகம்
தாகம் கொண்டு ஹரனவர் இணைய
கைகளில் அவதரித்தார் கையப்பன்
ஹரிஹர சுதனாய் ஐயப்ப மெய்யப்பன்.

பந்தள ராஜன் அரண்மனை வளர்ந்து
பாசாங்குச் சிறுதாயரர் பொறாமை புரிந்து
சபரிமலையில் தவம் மேற்கொண்டார்
ஐயப்ப சாமியாகி அருள் பாலிக்கிறார்.

சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா
சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Monday, 15 December 2025

நடையா நடைநடந்து

நடையா நடை நடந்து 

சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
நடையா நடைநடந்து
நாடெல்லாம் தான் கடந்து
கல்லும் முள்ளும் நடந்து வந்து
காடு மலை ஏறி நொந்து
மண்டல நாள் விரத மிருந்து
சொந்த சுகம் தான் மறந்து
சன்யாசம் மேற்கொண்டு
சகோதரம் பழகிக் கொண்டு
சமத்துவம் கடைப் பிடித்து
ஏற்றம் ஏழு மலை ஏறி
ஆற்றும் கரடு வழி நடந்து
போற்றும் உன் புகழ் பாடி
பேட்டைத் துள்ளி ஆட்டம் ஆடி
வந்தோமய்யா சபரிமலை
கண்டோமய்யா சாமி மலை.
பசி மறந்து பாட்டுப் பாடி
பதினெட்டுப் படிக ளேறி
இருமுடிக் கட்ட விழ்த்து
பூஜை புனஸ்காரம் செய்து
அபிசேகம் ஆராதனை
அத்தனையும் காட்சி கண்டு
அருள் வேண்டி நடை தாண்டி
பிரசாதம் முடி கட்டி
பின்சென்று படி இறங்கி
உத்தரவு உறுதி வாங்கி
பத்திரமாய் ஊர் திரும்பி
மணி மாலை கழட்டு வோம்
மணி கண்ட சாமியே
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா

கவிஞர். கொ.பெ.. பிச்சையா.


சபரி யாத்திரை


சபரி யாத்திரை.

சாமி சாமி சாமி சரணம்.
சரணம் சரணம் சாமி சரணம்.
சாமி தூரமோ!பயணம் எங்கோ!
சபரி மலைக்கே சாமி பயணமோ!

விரதம் இருந்து இருமுடி கட்டி
சபரி யாத்திரை.
தவயோகி ஐயப்பன் காணும் யாத்திரை
நவயோகம் பெறுவதற்கே
சரணம் ஐயப்பன்
 
தர்மசாஸ்தா சாமி சன்னதிக்குப் 
பயணம் தொடருது.
கர்ம பாவம் களைவதற்கே 
பயணம் தொடருது.
எரிமலை ஏற்றம் முன்னே
பேட்டைத் துள்ளுது. 
வாபரை வணங்கியே
பயணம் தொடருது.

சபரிமலை சாஸ்தாவுக்கே
சரணம் சொல்லுது.
மணிகண்ட சாமிக்கே
சரணம் பாடுது.
எருமேலி ஏறிப் பின்னே!
ஏழுமலையே!
சாமி சாமி சரணம் பாடி
சன்னதி நோக்கி

பேரூர் தேட்டை ஓடை
கண்டுமேக் காலாற்றி
யாத்திரையே பெரும்பாதை
பயணம் தொடருது.

அடுத்து வரும் அழுதாநதி நீராடி
அழுதாமலை ஏற்றம் ஏறுது.
அழுதாமலை கல்லெடுத்து
பயணம் தொடருது.
சாமி ஐயப்பன் நடந்து சென்ற
சபரிமலைப் பாதைஇதுவே.
சபரி பீடம் தரிசனமும் கண்டு நடந்தது.

இஞ்சிப் பாறை ஏற்றம் ஏறி
கரிமலை ஏற்றம்.
கொஞ்சம் இளைப்பாறிப்பின்
பம்பாநதி நீ ராடி நீலி மலை ஏற்றம்
சன்னதியை நெருங்க நெருங்க
சரண கோசங்கள்.
சாமி சாமி என்றே சாஸ்தா முழக்கங்கள்
சரணம் சரணம் என்றே 
ஐயப்பாப் பாடல்கள்.

ஹரிஹர புத்திரன்  அவதாரமே
அரக்கி மஹிசாவை வதம் செய்யவே.
அழுதாமலை கல்கொண்ட சாமிகளுமே
அரக்கி மஹிசா குன்றம் நோக்கி
வீசி எறிந்தனர்___அரக்கியை
வதம் செய்த அடையாளம் 
விதம் செய்தனர்.

சன்னதியில் சரணம் ஆனார்
சாமி ஐயப்பா.

நெய் மணக்கும் சபரிமலை
சாமி ஐயப்பா
பொய் மறந்தார் சபரிமலை
சாமி ஐயப்பா.
பிரம்மச்சரியம் பற்றி வந்தார்
சாமி ஐயப்பா
அறம் போற்றி விரதம் கொண்டார்
சாமி ஐயப்பா.
பதினெட்டுப் படியேறி சாமி ஐயப்பா 
பார்வை கொண்ட பயன் கண்டார்
சாமி ஐயப்பா.
யோகப் பட்டம் கட்டிக் கொண்டு
சாமி ஐயப்பா
தவக்கோலம் தான் கொண்டார்
சாமி ஐயப்பா.
இருமுடி தான் பிரித்து சாமி ஐயப்பா 
பெறும் பூஜை ஏற்றுக்கொண்டார்
சாமி ஐயப்பா.
சந்தனம் தான் குளித்து சாமி ஐயப்பா 
வந்தனம் ஏற்றுக் கொண்டார் சாமி 
ஐயப்பா 
அருள் வழங்கி ஆசி தந்தார் சாமி ஐயப்பா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 13 December 2025

கிராம தேவதைகள்

கிராம தேவதைகள்

அம்மா அம்மா என்றே அழைக்கிறோம்
சும்மா இல்லை சுகமாக வாழ்கிறோம்.
சந்தனம் மணக்கும்  சந்தன மாரிகள்
வந்தனம் உமக்கே வாழ்த்து கிறோம் வாழி!

உச்சிமகா காளி வடக்குவாச் செல்வி
உச்சம் தந்த தெய்வங்களே வாழி!
அஷ்டக் காளிகள் அவதாரத் தாய்களே
இஷ்டமான எங்கள் தெய்வங்களே வாழி!

எல்லைக் காவல் கருப்பச் சாமிகள்
தொல்லை களில்லை நோய்க ளில்லை
வல்ல தெய்வங்கள் வாழும் வல்லூராம்
கொல்லம் பரும்பூரம் நல்லூராம் வாழி!

எத்தனைத் தாய்கள் எமைப் பெற்றாலும்
அத்தனைத் தாய்களும் நீவீர் அம்மா.
ஒத்தணைத்த ஒருதாய் பிள்ளை களாம்
சித்தம் ஒன்றி வாழ வைத்தீர்கள் வாழி!

நீர்வளம் நிலவளம் சீர்பெற்ற நல்லூராம்
போர்த் தளமாம் வீரமண் கொல்லம் பரும்பாம்.
பஞ்சம்பசி கொஞ்சமும் இல்லா ஊராம்
மிஞ்சியதும் கொடுத் துதவும் நல்லூராம் வாழி.!

படித்தவர்கள் படிப்பாளிகள் மேதாவிகள்
தடித்தசொல் வீசாதார் தாழவும். பேசாதார்
முடிக்கும்  செயலே முனைவ ரென்றும்
விடியல் கண்ட வாழ்வே வாழி!வாழி!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

ஐயனார்

வெள்ளிச் சரிகை வேட்டி கட்டி
வெள்ளக் குதிரை ஏறி வாரார்.
வீச்சருவாள் கையில் ஏற்றி
கொல்லம் பரும்புக் காவல் சாமி
நல்ல அய்ய னாரு சாமி
துள்ளித் துள்ளி வாராரு

கருத்த மீசை முறுக்கி விட்டு
கம்பி மாதிரி வளைச்சி விட்டு
மின்னல் சரிகை தலைப்பாக் கட்டி
மிரட்டுஞ் சாட்டை சுழட்டிக் கிட்டு
விரைநது வாரார் அய்யனார்.

ஊருக்கு மேற்கே உசந்த கோபுரம்
உள்ளது கோட்டை அய்யனார் கோவில்
நேரே கிழக்கு கொல்லம் பரும்பு
ஊரே அய்யனார் காவல் வரம்பு.

வேட்டைக்கு என்ன அவசரமோ
சாட்டைக்கு என்ன அவசியமோ
தேடி வந்தோம் கோவிலுக்கு
தேவைக்குத் தானே ஓடி வந்தோம்.

நோய் நொடி இல்லா ஊராக
நீ செய் அய்யா அய்யனார்.
வாடிய விவசாயம் வளம்பெறவே
வகை செய் அய்யா அய்யனாரே.



Thursday, 11 December 2025

வேண்டும் வேண்டும்.


வேண்டும்!வேண்டும்!

பூமியில் பிறவி வேண்டும்.
பிறவியில் மனிதம் வேண்டும்..
மனிதனில் மனம் வேண்டும்.
மனத்தினில் அன்பு வேண்டும்.

அன்புக்குக் கருணை வேண்டும்.
கருணைக்கு இரங்க வேண்டும்
இரங்கிட  அருள் வேண்டும்.
அருளிடத் தூய்மை வேண்டும்.

தூய்மைக்குப் பக்தி வேண்டும்.
பக்திக்கு இறைஞ்ச வேண்டும்.
இறைஞ்சிட மெய்மை வேண்டும்.
மெயமையே துலங்க வேண்டும்.

துலங்கிடத் தியானம் வேண்டும்.
தியானிக்கச் சிந்தை வேண்டும்.
சிந்தைக்குள் அமைதி வேண்டும்.
அமைதிக்குத் தீர்க்கம் வேண்டும்.

தீர்க்கம்பெற ஞானம் வேண்டும்.
ஞானம்பெற யோகம் வேண்டும்.
யோகம்பெற பயிற்சி வேண்டும்.
பயிற்சிக்குப் பழக வேண்டும்.

பழகிடத் துணிய வேண்டும்..
துணிந்திட உறுதி வேண்டும்.
உறுதிக்கு உரம் வேண்டும்.
உரம் பெற நம்பிட வேண்டும்.

நம்பிட ஒரு மாரக்கம் வேண்டும்.
மார்க்கம் அதைத் தேடிட வேண்டும்.
மார்க்கஞ் சேர்ந்திட மூலம் வேண்டும்.
மூலம் அதைப் பற்றிட வேண்டும்.

உறுதியில் உறுதி வேண்டும்
உறுதியிற் தேடல் வேண்டும்.
தேடித் தேடிக் கிடைத்திட வேண்டும்.
தெய்வத் தரிசனம் யோகம் வேண்டும்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




இயற்கையே போற்றி!

இயற்கை நீயே இறையே போற்றி!

ஒளி ஒலி! நீர் நெருப்பு 
வளி வெளி வான்!மீன் 
இரவு பகல்! வகை வடிவு!
இயற்கை நீயே இறையே போற்றி!

மழை வெயில் மலை மண் 
விதை முளை மூலம் தூலம் 
நிசம் நிழல் நிலம் கடல் 
இயற்கை நீயே இறையே போற்றி!

மலர் மணம் குலம் குணம் 
கரு உரு பேதம் பிரிவு
வேற்றுமை ஒற்றுமை அறிவு ஆற்றல்
இயற்கை நீயே இறையே போற்றி!

மொழி வழி இசை எழுத்து 
ஈவு ஈகை கலை களிப்பு 
உயிர் உடல் ஊன் ஊக்கம்
இயற்கை நீயே இறையே போற்றி!

ஆண் பெண் அசல் நகல் 
பூவு பிஞ்சு காய் கனி 
செடி கொடி மரம் புரம்
இயற்கை நீயே! இறையே  போற்றி!

ஆக்கல் அழித்தல் பிறப்பு இறப்பு
அழகு அவலம் பஞ்சம் பசி
நிறை குறை வளம் வறுமை
இயற்கை நீயே இறையே போற்றி!

நடப்பன பறப்பன ஊர்வன நீய்வன
நகர்வன நிலையன மொழிவன ஓலிவன
சத்தம் சங்கீதம் காவியம் கற்பனை
இயற்கை நீயே இறையே போற்றி!

இயற்கை நீயே இறையே போற்றி!
இயல் இசை நாடகத் தமிழே போற்றி!
செயல் முறை யாவும் சீரே போற்றி"
தயவென யாவும் இயற்கையே போற்றி!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.






பக்தியின் பலஹீனம்

பக்தியின் பலவீனம்!

முக்தி பாடி விளக்குவார்
பக்தி மூடி ஒளிந்திருப்பார்.
சக்தி வேடம்புனைந்திருப்பார்

மாலைகள் சூடுவார்
மந்திரங் கூறுவார்.
சேலைகள் கண்டாரானால்
சிங்காரம் பாடுவார்.

பாவிகள் கூடுவார்
தேவிகள் ஆடுவார்.
ஆவிகள் விரட்டுவதாய்
கோபியரைக் கொஞ்சுவார்.

சாந்தி கிடைக்குமென்பார்.
சர்வமும் நானென்பார்.
வாந்தி எடுக்கவைத்து
வரிசையாய் சமாதிவைப்பார்.

காவடி தூக்குவார்
காவியும் உடுத்துவார்.
சேவடிகள் சேவிக்க
சேத்திரங்கள் செல்லுவார்.

ஆவதும் அதனாலே
ஆயிரம் உண்டென்றால்
போவதும் சில லட்சம்
போக்கியும் வாரிடுவார்.

கருநாவிற் கடவுளின்
திருநாமம் செப்புவார்.
உருவாக்கிக் கூட்டத்தை
ஊரறிய திரட்டுவார்.

தெருக்களில் பாடச்செய்வார்
திருப்பணி மயக்கிவைப்பார்.
விளம்பரம் ஆக்கிக்கொள்வார்
வருமானம் பெருக்கிச்சேர்ப்பார்.

கோடிகளாய் செல்வங்கள்
குவியுது போலிகளிடம்
பக்தியெனும் பலவீனம்
பயன்படுத்தும் தந்திரம்...

படித்த முட்டாள்களும்
பாசாங்கை நம்பும் வரை
கருத்த பாவங்களும்
வேசமிட்டு ஆடாதோ!

இடிந்த கோவில்களாய்
இதயங்கள் இருண்டதால்
உணர்ந்த பக்தி மெய்யும்
உள்நுழையக் கூசாதோ!

மனிதரின் நம்பிக்கையை
மயக்கமென எண்ணியே
புனிதராகும் வேடத்தையும்
பொறுக்குமோ மெய்ப்பொருளும்!

எதுவரை போகுமோ
அதுவரை போகட்டும்!
வேடங்கள் கலைவதற்கும்
வெகுதூரம் இல்லையே!!.


சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா,




Monday, 8 December 2025

ஆனைமுகனே

ஆனை முகனே அருள் செய் ஐங்கரனே

ஆனைமுகனே அருள் செய் ஐங்கரனே!
தானைத் தலைவனே தர்மத்தின் காவலனே!
வினை தீர்க்கும் கண நாதா! 
எனை மீட்பாய் குணநாதா!

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பானை வயிறோன் பண்பின் பழமே.
ஏழையின் இனனே எலியின் வாகனனே.
ஊழை விரட்டும் வினைமுன் காவலனே.

உலகே சொந்தம் உனக்குள்ள பந்தம்.
பழகிட என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி கைய்யாகும் ஆனைமுகன் நீதெரிந்தால்.
சந்திப்பு இடமெங்கும் சந்திப்பாய் நீ உறைந்தால்.

முந்தி முன்னிற்கும் நல்வினைநீ ஆனணையிட்டால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே தீனமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் கருணையே
நானும் அருகாவேன் பூணுமணி பொற்சரமே!.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 6 December 2025

இருமுடி

இருமுடி

சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா
இருமுடி கட்டி விரதம் இருந்து 
சரணம் சொல்லி சாமி எண்ணி
பெருவழிப் பாதை திருமொழி பாடி
வருகிறோம் தேடி ஒருமுனை கூடி.

பலமுடி  கட்டி இருமுடி ஏற்றி
நலமுடன் பலப்பல ஆண்டுகள் ஓடி
சேமம் குருசாமி செல்லத் துரைசாமி
சிரமங்கள் விலக்கி சேர்ந்துணை பழகி 
களைப்புகள் நீங்க கலகலப்பாகி
மலைக்காமல் ஏற்றம் வழி நடத்திவாரார்

படவீட்டம்மன் அருளினைப் பெற்று 
திடமுடன் சாமிகள் கடமைகள் கற்று 
உணவுக்கு ஓருமுடி சாமிக்கு மறுமுடி
இருமுடி கட்டி வழி நடத்த வருவீர்.
பொய்யறு பாங்காய் நெய்நிறை தேங்காய் 
நொய்யறு அரிசி பூஜைப் பொருட்கள் 
முன்முடி பின்முடி இருமுடி கட்டி 
உன்வழி  தொடர்கிறோம் சாமி ஐயப்பா.

சாமி சாமி சாமான்யரும் சாமி 
சமத்துவம் பழகும் சமரசம் சாமி
உயர்வு தாழ்வு வேற்றுமை இல்லை 
பயிலும் சமத்துவம் பேதங்கள் இல்லை 
ஒருகுலம் ஓருநிறை ஒற்றுமைப் பயிற்சி 
திருமுறை பழக்கும் தெய்வீக முயற்சி.
சாமி என்றால் சகோதரம் சாமி
காமிக்க ஒன்றாம் சபரிமலை சாமி 

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 5 December 2025

வேடநத்தம்.


விரும்பும் ஊர் வேடநத்தம்.

வேட நத்தம் ஊர் என்றாலே-- மனம்
விரும்பும் ஊர் எனும் பொருளாம்
நாடு போற்றும் நல்ல ஊராம்--உளம்
நாடும் வசதிகள் கூடும் ஊராம்.

தூத்துக் குடியாம் மாவட்டம் --வளம்
ஏற்றுக் குடியாம் வேடநத்தம்.
வேற்று மைகள் பாராட்டா--உலகம்
போற்றுக் குடியாம் வேடநத்தம்.!

ஊரென ஒன்றாய் சேருவார்-- அன்பில்
உயர்ந்தது தோப்பால் கூறுவார்.
சீரென ஊரைப் போற்றுவார்-- வான்
நேரெனக் கோபுரம் தோற்றுவார்.

வேடுவர் மாதை விரும்பியே-- வேலன்
தேடிக் களைத்துத் திரும்பியே.
வேடர் நத்தம் கண்டானே--நந்நீர்
ஓடப் பெருக்கினாள் விசாலாட்சி !

வீர வேடர் நீராவி கண்டு--அவர்
வேட்கை தணிய பருகிட மொண்டு
ஆறிய தாகம் அருமை கொண்டு--தாகம்
தீர்ந்த நத்தம் வேட நத்தம்.

ஊரெனக் குடும்பம் ஒன்றில்-- பந்தம்
தேரெனக் கூடிச் சொந்தம்,
சீரென நகர்த்தும் செம்மை-- மொத்தப்
பேரெனப் புகழ்வார் வேடநத்தம்! 

விரிந்தும் பெருகி வளர்ந்தும்- நாளும்!
புரிந்த சமத்துவம் அமைந்து
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்-பரவி
விரைந்து பெருகும் வேடைநகர்.

சுவர்க்கம் என்றால் எங்கே--அது
இருக்கும் வேடைநகர் அங்கே.
கரிய மாலின் கருணையில் --புவி
புதிய சுவர்க்கம் வேடை.நகர்.

காசி விசாலா காமாட்சி ----ஊர்
வாசி விஸ்வ நாதன் ஆசி
நேசி மனமே மாசினி வீழும்--மேவும்
ஆட்சியின் வேடை நகர் வாழி!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
க்ஷ

கும்மிப் பாட்டு

கும்மிப் பாட்டு 

கும்மியடி பெண்ணே கும்மியடி
குனிந்து நிமிர்ந்து கும்மியடி
நாடார் குலதேவி பத்திரகாளி 
நல்லருள் வேண்டி கும்மியடி.

கொல்லம் பரும்பூர் குடிகொண்ட
நல்லருள் தேவி பத்திரகாளியே!
வல்லமை கொடுத்து வாழ்வளித்த
நல்லவை வணங்கியே கும்மியடி.

சிவனார் நெற்றிக் கண்ணிலே!
சிவப் பொரிகளால் அவதரித்து,
அவலம் போக்கிய அம்மா நீ!
உவந்து வாம்மா பத்திரகாளியே வா!

நாடார் குலத் தாயே நீ!
நாடாப் பிணிகள் ஓட்டியே!
வாடா மல்லிப் பூப்போலவே,
கோடாக் காப்பு பத்திரகாளியே வா!

விரதம் கொண்டு காத்து வந்தோம்
வளர்த்து முளைப்பாரி சுமந்தோம்
அருளை வேண்டி குலவை இட்டோம்
அருள்செய் அம்மா பத்திர காளியே வா!

அல்லவை நீக்க வரம் பெற்றாயே
அக்கிரமம் அழிக்க அவதரித்தாயே
ஆனி மாதங்கள் கொண்டாடி னோம்
அவனி அருளம்மா பத்திரகாளியே வா!

ஆண்டு வந்த பரம்பரை  அம்மா.
ஆண்டு வாரோம் அகில மெல்லாம்.
நாடா ரின்றி நாட்டாமை இல்லை.
நாடே கொண்டோம் பத்திர காளியே வா!

தரத்தில் உயர்ந்தோம் உன்னாலே!
வரத்தில் வாழ்ந்தோம் தன்னாலே.
நாடார் என்போம் பெருமை யாய்.
கேடில்லை எம்மாலே காளியே நீ வா!

மதித்தே கற்றோம் மரியாதையே!
உதித்தே வந்தோம் உன்னாலே!
உழைப்பால் தான் சயமரியாதை.
தலை நிமிர்ந்தோம் பத்திர காளியே வா!

உலகம் எங்கும் பரவி வாழ்ந்தோம்.
பழகும் தன்மை உண்மை நின்றோம்.
வரம் தந்த தாயே உன்னாலே தான்.
வாழ்கிறோம் மேன்மை பத்திர காளியே வா!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 4 December 2025

மாலையம்மன் வரலாறு

மாலையம்மன் வரலாறு.

சிந்து நதிக் கரையின் முந்தியநாகரிகம்
கொண்டு அமைந்தது இந்து ஆகமம்
சத்திய குலத்தின் ஆதார உதயம்:
பிச்சையா இகடோன் மாலையம்மாள் சரிதம்.

நாடோடி போன்று ஓடோடி அனுப்பர்
தேடிய பட்டி கவுண்டன் பட்டி.
உகந்த பக்தி ஒன்னம்மா வம்சம்,
தவந்தன் சக்தி கம்பளர் அம்சம்;

ஆடுகள் மேய்ப்பது அனுப்பர் பிழைப்பு,
வீடுகள் காப்பது மகளீர் பொறுப்பு.
வேளான் என்பார் விவசாயி ஆவார்,
தாளாண்மை ஆர்வர் தன்னிக ராவர்.

கவுண்டன் பட்டி கல்லூரணி ஊரார்,
உகந்த கெட்டி ஓர் ஊரார் போலர்.
இரு ஊர் நாட்டாமை வைரவக் கவுண்டர்
ஒரே தங்கை மச்சானுடன் வாழ்ந்தார்.

தங்கை இரட்டை பெண்கள் ஈன்று
சென்றாள் அண்ணன் கைகளில் ஈந்து.
வீச்சிட இரட்டைக் குழந்தைகள் ஏந்தி:
உச்சி முகர்ந்தார் தாய்மாமன் தாங்கி.

தங்கை பெற்ற தவப்புதல் வியர்கள்,
சின்னு பைய்யி வீரபையி இருவர்;
சக்தி பெற்ற ஒன்னம்மா பக்தியர்:
சித்தம் சுத்தம் மாமன் பற்றியர்.

மருமகள் உறவு பிணையாக ஆனார்,
பிறவி பறந்து கடனாக்கிப் போனாள்.
தாய்க்குறை தீர்க்க தன்மடி சுமந்தார்.
தாயான வைரவர் தாயாகி வளர்த்தார்.

சின்னு பைய்யும் வீர பைய்யும்,
கண்கள் ஐய்யம் காணிடச் செய்யும்.
இருவர் ஒருவர் என்பதன் அதிசயம்,
மறுகும் கண்கள் மயக்கும் இரகசியம்.

சேமம் மேலக் கல்லூரணிக் காடு.
மாமன் ஆடுகள் மேய்ய்த்திடும் பாடு.
வேளைகள் மதியம் மாமனைத் தேடி.
சோறு சுமப்பர் சோதரி கூடி.

வாலைக் கன்னியர் சோறு ஆக்கி,
மேலக் கல்லூரணிக் காடு நோக்கி,
மாமன் பாசம் ஆசையில் தேக்கி:
ஏகினர் விசாகம் நோன்பும் தாங்கி.

களையஞ் சுமந்திரு கன்னியர் செல்ல, 
வளைந்த கதிர்கள் என்னமோ சொல்ல!
குருவிகள் பறந்து வழித்துணை பாடி
இரட்டை எழிலில் எவளெனத் தேடும்..

எரியும் சூரியனும் இரக்கம் பார்ப்பான்.
கருப்பு நேராமல் கருமேகம் ஒளிவான்.
மருளும் மதியம் இரவென மயங்கும்:
விரையும் மதியும் வழியது தொடரும்.

தென்றல் கொண்டல் பூவாரித் தூவும்;
கண்டால் ஊர்வசி மேனகை சோரும்.
மாமனைக் காணும் மாலது கூடி
கண்ணெட்டும் தூரம் தேடினர் ஓடி

சிரித்து விளையாடி நடத்திய பாதை,
மறித்துக் குலையாட வருத்திய வேளை
விரித்த படங்காட்டி விடமுடன் நாகம்:
முறுக்கிச் சுருளாக சுற்றியது தேகம்.

மாலனை அழைத்த பாஞ்சாலி போன்று,
மாமனைக் கூவினர் அவலையர் இன்று.
செவிகள் உணர்த்தும் அபாயம் எதுவோ!
தவிக்குந் தாயின் அவசரம் இதுவோ!

பதறித் துடித்து அலறி ஓடி,
கதறும் செவிவழி காடுகள் தேடி;
கண்டான் அவலம் கண்மாய் கரையில்:
நின்றான் வடித்த கண்ணீர் திரையில்.

தலைக்கும் மேலே படமெடுத் தாட,
அறுத்தான் அரவம் தலையது ஓட;
சிதைத்தான் பாம்பை துண்டங் களாக:
விடுத்தான் இருவரை தனித்தனி ஆக.

சர்பத்தின் தலையோ தரையைச் சீண்டி
சீறிப் பறந்தது மாமனைக் தீண்டி
சோகம் நிறைந்தது சுந்தர வதனம்:
தேகம் குளிர்ந்து சொன்னது பயணம்.

ஆவி பிரிகிற வேளை நெருக்கம்,
கேவி உரைக்க நாவது சுருக்கும்.
பாவி நானோ பறந்திடு வேனோ!
கோவிப் பாளேஉம் தாயெனப் பறந்தார்.

மருமக்கள் இருவர் மாமன் மார்பில்
பொருந்தக் கதறி புரண்டனர் சோர்வில்.
இறைவன் கட்டளை இதுவே ஆனால்:
எமக்கினி உற்றதும் அதுவே என்றார்.

தாயன்பின் பிறகு தாய்மாமன் துணை,
தாய்மாமன் பிறகு யாரிங்கு இணை?
அனாதை அவலம் எவர்க்கும் பாவம்:
இனமான கற்பின் இவரானார் தீபம்.

வாழ்வினி வாழ ஊரென்ன சொல்லும்!
வாழ்வே போயின் யாரென்ன செய்யும்!
காணுந் திசைகள் கண்ணீர் சொறிந்து
வானம் துடிக்க கானகம் அழுதது

மாமனை ஏந்தினள் சின்னு பைய்யி,
மடிமீது புரண்டனள் வீர பைய்யி.
தீயுண்ட வன்னிமரம் தாயெனப் பற்ற
மேயும் ஆடுகள் தாவின உடன்தீ.

அரவம் தீண்டிய சாபம் என்ன?
அறிவும் தாண்டிய பாவம் என்ன?
பெற்றுப் போனாள் அனாதை யானோம்
உற்றார் போனால் நாமென் னாவோம"

மருமக்கள் ஒப்பாரி வானம் பிளக்க,
மறுமுனை செவ்வேறி தானும் முழக்க;
ஆகாயம் தீவாரி காடுகள் எரிந்தன:
மேகாயம் பூவார வானேகிப் பறந்தனர்.

வானவர் சூழ வாழ்த்தொலி பாட,
மாணவர் ஏற்று மாலைகள் சூட
மாலை யம்மன் எனும்பேர் ஆட
மேலக் கல்லூரணி அமர்ந்தனர் வீடு.

இகடோர் வழியின் மூத்த மகளே!
இகமும் பரமும் உன்னிறைப் புகழே!
அனுப்பரின் காவல் புலமுன் கோவில்!
துணையுன் ஏவல் தெய்வம்நீ நேரில்.

ஒன்னம்மா ஆக்கிய அக்கினிக் குஞ்சு,
பின்னும் மேலக் கல்லூரணி எஞ்சி;
வீரிய நெருப்பு மேவிய தீர்ப்பு:
வீர பைகளின் கற்பதன் ஏற்பு.

சோம வாரம் ஆராதனை நேரம்,
ஏமம் விசாகம் குருபூசை நாளாம்;
வசத்தின் நம்பிக்கை அசத்தும் ஆசை:
நிசத்தின் தெய்வம் நித்திய பூசை:

நேரில் ஆளோடு பேசுந் தெய்வம்.
நேருந் துன்பங்கள் தீர்க்குந் தெய்வம்.
கம்மங் காடுகள் காக்குந் தெய்வம்.
கைவளை வாங்கி கோர்குந் தெய்வம்.

கொ.பெ.பி.அய்யா.
.

Wednesday, 3 December 2025

கந்தா கந்தா கந்தய்யா

காவடிப் பாட்டு.

கந்தா கந்தா கந்தய்யா!
காவடி ஆடும் கந்தய்யா!
வந்தோம் வந்தோம் கந்தய்யா--உன்
சன்னதி தேடி கந்தய்யா"
வேலா வேலா வேலய்யா!
வினைதீர் வடிவேல் வேலய்யா!.
வேண்டி வேண்டி வேலய்யா,-உனை
வேண்டி வந்தோம் வேலய்யா!

கடம்பா கடம்பா கார்த்திகேயா!
காத்தருள் வாயே கார்த்திகேயா!
நடந்தோம் நடந்தோம் கார்த்திகேயா--நீ
நல்லருள் தருகக் கார்த்திகேயா!
முருகா முருகா முருகய்யா!.
வருவாய் வருவாய் முருகய்யா!.
வரவாய் நீயருள் முருகய்யா-வரம்
தருவாய் திருவாய் முருகய்யா!

பாலா பாலா சிவபாலா"
பழம்நீ பழனி சிவபாலா!
மயில்மேல் வருவாய் சிவபாலா--வள்ளி
மனம்மகிழ் அழகா சிவபாலா!
பாணி பாணி தண்டபாணி!
பழனி நின்ற தண்டபாணி!
ஔவைத் தமிழ் நீ தண்டபாணி--தமிழ்
செவ்வை மொழிநீ தண்டபாணி!

குன்றம் குன்றம் குமராநீ!
கொண்டும் கொண்டும் குமராநீ!
நின்றும் நின்றும் குமராநீ--வரம்
தந்தும் வளம்செய் குமராநீ.!
வள்ளி தெய்வானை கணவாளா!
நல்லதே அருளும் திருவாளா!
நாளும் நல்லருள் கொடையாளா--மணக்
கோலம் கொண்ட மணவாளா!

அம்மை அப்பன் சண்முகனே
அறுகுணத் தும்சம் அறுமுகனே
சரவணப் பொய்கை சரவணனே--அருள்
தருவதன் அம்சம் திருமுகனே
தீய சக்தித் தீர்ப்பவனே
நேய பக்தி ஈர்ப்பவனே
கந்த சஷ்டிக் கவசனே--காக்கச்
செந்தூர் வெற்றித் திருமகனே

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 2 December 2025

வினாயகா!


நானும் அருகாவேன்.

வினைகள் தீர்த்து துணைசெய் நாயகா.
எனைநீ பார்த்து துணைவா (வி)நாயகா.
உனைநான் கேட்டேன் எனைநீ மீட்டு
அணைஉன் கூட்டாய் கணநீ நாதா.

அறிவின் திருவே அமைதியின் உருவே.
உறவின் தருவே உதவும் பெருவே.
தொழிலின் குருவே தொடரும் வரவே.
பொழிவாய் அருளே புகழின் பொருளே.

ஆணை முகனே அன்பின் அழகே.
பாணை வயிறே பண்பின் பழமே.
ஏழை இனமே எலியுன் தனமே.
ஊழை விரட்டு மறுநாள் தினமே.

உலகே சொந்தம் உனக்கென்ன பந்தம்.
பழக என்றும் சனியுன்னை அஞ்சும்.
விலகும் தோஷங்கள் விநாயகா என்றால்.
துலங்கும் நேசங்கள் கணபதி கண்டால்.

வாஸ்தும் பொய்யாகும் வாசல் நீயிருந்தால்
ஆஸ்தி செய்யாகும் ஆனை நீதெரிந்தால்.
சந்தி இடமெங்கும் சந்திக்க நீஉறைந்தால்.
முந்தி சுபமங்கு முன்னிற்கும் நீபுரிந்தால்.

ஞானத் திருமுகமே மோனப்பெரும் பொருளே
தானம் தருமருளே கோணமழி ஐங்கரனே.
பேணும் பெருமானே வேணுமுன் நல்வரமே
நானும் அருகானால் பூணுமணி தாராவேன்.


கொ.பெ.பிச்சையா.


பத்திரகாளி துதி

பத்திரகாளி துதி.

கொல்லம் பரும்பு  நாடார் குல
குலதெய்வம் பத்திர காளியே போற்றி.
அக்கிரமங்கள் அழிக்க வந்த 
உக்கிர தேவி பத்திரகாளியே போற்றி.

கன்னிகை தேவிக்கும் சத்திரிய குருவுக்கும் பிறந்த நாடார் வம்ச
குழந்தைகள் எழுவர்கு தாயாகித் 
தத்தெடுத்து வளர்த்த தாயே 
பத்திரகாளியே போற்றி! போற்றி!

தட்சனை அழிக்கத் தன் படைப்பாக
தனிவரம் பெற்ற காளியே போற்றி 
வீர அம்சம் சத்திரிய வம்சம் 
நாடார் குலதெய்வமே போற்றி! போற்றி!

உலகெலாம் வணிகம் செய்ய 
உடன் செல்லும் காவல் தெய்வமே போற்றி.
வீர வம்சம் வெற்றி அம்சம் நாடார்கு
துலாக் கோல் தானளித்த பத்திர காளியே போற்றி! போற்றி!

செல்லும் இடமெல்லாம் சிறப்புற வாழவே
அல்லும் பகலும் அவருடன் காவலே
அரணேயான பத்திர காளியே போற்றி 
உரமே வரமே தாயே காளியே போற்றி!
 போற்றி!

ஈசன் மகளே எழுதீ நலமே
வாசன் மருமகள் வளர்பிறை குலமே
தட்சனை வதைக்கத் தனி வரம் பெற்ற
இலட்சியத் தாயே பத்திர காளியே போற்றி! போற்றி!

பார்வதித் தாயை பஸ்பமாக்கிய
பாவி தட்சனை அழித்த காளியே
அசுர குலத்தை அடியோடு அழித்த
ஆக்ரோசத் தேவியே பத்திர காளியே
போற்றி"! போற்றி!

முக்கண் தேவியே முன்னாவுக் காளியே
பதினெட்டுக் கரங்கள் பதினெண் ஆயுதங்கள்.
திக்கெட்டும் அதிரும் திமிற்செரு பார்வையும்
விதி முடிக்கும் காளியே போற்றி போற்றி!!
 
தீயவை தீர்க்கவே தீயாய் வந்தவள்
அல்லவை அழிக்கவே அவதாரம் எடுத்தவள்
சிவனார் புத்திரி சிவபாலர் சோதரி
மாயவன் மருமகள் பத்திரகாளியே போற்றி! போற்றி!

திரிசூலிக் கோவியே! புலிவாகனச் சூரியே!
அரிகரன் சொந்தக்காரி அபயக்குரல்
அவசரக்காரி!
தராசுக்கோல் தன்யக் காரி தனயன் நாடார் பந்தக்காரி.
புண்ணிவதி பத்திர காளியே போற்றி! போற்றி!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 1 December 2025

சபரி மலை சரணம்.



சபரிமலை வாழும் நீ
சாமி ஐயப்பா-உன்
சரணக்கலை நாடிவாரேன
சாமி ஐயப்பா!
பள்ளிக்கட்டுக் கட்டிக்கிட்டு
சாமி ஐயப்பா--பேட்டைத்
துள்ளி ஆடி வாரேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

பதினெட்டு மலைதாண்டி
சாமி ஐயப்பா!
பதினெட்டுப் படியேறி
சாமி ஐயப்பா!
கதியென்று உனைவேண்டி
சாமி ஐயப்பா
அருளென்று தேடினேன்
சாமி ஐயப்பா!
விரதம் ஏற்று நடந்து வாரேன்
சாமி ஐயப்பா---உன்னால்
சாதி மதம் மறந்துவிட்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா"
சரணம் ஐயப்பா!

சரணம் சரணம் கூறிக்கொண்டு
சாமி ஐயப்பா!
உச்சிமலை ஏறிவந்தேன்
சாமி ஐயப்பா!
எண்ண மெல்லாம் வாழும் நீ
சாமி ஐயப்பா!
எனக்குள்ளே கண்டு கொண்டேன்
சாமி ஐயப்பா!--உன்னால்
சமத்துவம் பழகிக்கொண்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

சாமிசாமியே! சரணம்சரணமே!
சாமியெல்லாமே!சகலமெல்லாமே!
ஐய்யன்ஐய்யனே!மெய்யன்மெய்யனே!
அகிலமெல்லாமே!அன்பிலெல்லாமே!

துளசிமாலை சத்தியமா போடுவேன்.
பழகிப் போச்சு நிதமுன்னைப் பாடுவேன்
சாமி சாமி சாமினு சொல்லிச் சொல்லி
சாமி ஆயிட்டேன்
சரணம் சரணம் சரணஞ் சொல்லி
சரணடைஞ் சிட்டேன்.
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா!சாமி ஐயப்பா!

கொ.பெ.பி.அய்யா.