கொல்லம் பரும்பு நாடார் குல
குலதெய்வம் பத்திர காளியே போற்றி.
அக்கிரமங்கள் அழிக்க வந்த
உக்கிர தேவி பத்திரகாளியே போற்றி.
கன்னிகை தேவிக்கும் சத்திரிய குருவுக்கும் பிறந்த நாடார் வம்ச
குழந்தைகள் எழுவர்கு தாயாகித்
தத்தெடுத்து வளர்த்த தாயே
பத்திரகாளியே போற்றி! போற்றி!
தட்சனை அழிக்கத் தன் படைப்பாக
தனிவரம் பெற்ற காளியே போற்றி
வீர அம்சம் சத்திரிய வம்சம்
நாடார் குலதெய்வமே போற்றி! போற்றி!
உலகெலாம் வணிகம் செய்ய
உடன் செல்லும் காவல் தெய்வமே போற்றி.
வீர வம்சம் வெற்றி அம்சம் நாடார்கு
துலாக் கோல் தானளித்த பத்திர காளியே போற்றி! போற்றி!
செல்லும் இடமெல்லாம் சிறப்புற வாழவே
அல்லும் பகலும் அவருடன் காவலே
அரணேயான பத்திர காளியே போற்றி
உரமே வரமே தாயே காளியே போற்றி!
போற்றி!
ஈசன் மகளே எழுதீ நலமே
வாசன் மருமகள் வளர்பிறை குலமே
தட்சனை வதைக்கத் தனி வரம் பெற்ற
இலட்சியத் தாயே பத்திர காளியே போற்றி! போற்றி!
பார்வதித் தாயை பஸ்பமாக்கிய
பாவி தட்சனை அழித்த காளியே
அசுர குலத்தை அடியோடு அழித்த
ஆக்ரோசத் தேவியே பத்திர காளியே
போற்றி"! போற்றி!
முக்கண் தேவியே முன்னாவுக் காளியே
பதினெட்டுக் கரங்கள் பதினெண் ஆயுதங்கள்.
திக்கெட்டும் அதிரும் திமிற்செரு பார்வையும்
விதி முடிக்கும் காளியே போற்றி போற்றி!!
தீயவை தீர்க்கவே தீயாய் வந்தவள்
அல்லவை அழிக்கவே அவதாரம் எடுத்தவள்
சிவனார் புத்திரி சிவபாலர் சோதரி
மாயவன் மருமகள் பத்திரகாளியே போற்றி! போற்றி!
திரிசூலிக் கோவியே! புலிவாகனச் சூரியே!
அரிகரன் சொந்தக்காரி அபயக்குரல்
அவசரக்காரி!
தராசுக்கோல் தன்யக் காரி தனயன் நாடார் பந்தக்காரி.
புண்ணிவதி பத்திர காளியே போற்றி! போற்றி!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment