கும்மியடி பெண்ணே கும்மியடி
குனிந்து நிமிர்ந்து கும்மியடி
நாடார் குலதேவி பத்திரகாளி
நல்லருள் வேண்டி கும்மியடி.
கொல்லம் பரும்பூர் குடிகொண்ட
நல்லருள் தேவி பத்திரகாளியே!
வல்லமை கொடுத்து வாழ்வளித்த
நல்லவை வணங்கியே கும்மியடி.
சிவனார் நெற்றிக் கண்ணிலே!
சிவப் பொரிகளால் அவதரித்து,
அவலம் போக்கிய அம்மா நீ!
உவந்து வாம்மா பத்திரகாளியே வா!
நாடார் குலத் தாயே நீ!
நாடாப் பிணிகள் ஓட்டியே!
வாடா மல்லிப் பூப்போலவே,
கோடாக் காப்பு பத்திரகாளியே வா!
விரதம் கொண்டு காத்து வந்தோம்
வளர்த்து முளைப்பாரி சுமந்தோம்
அருளை வேண்டி குலவை இட்டோம்
அருள்செய் அம்மா பத்திர காளியே வா!
அல்லவை நீக்க வரம் பெற்றாயே
அக்கிரமம் அழிக்க அவதரித்தாயே
ஆனி மாதங்கள் கொண்டாடி னோம்
அவனி அருளம்மா பத்திரகாளியே வா!
ஆண்டு வந்த பரம்பரை அம்மா.
ஆண்டு வாரோம் அகில மெல்லாம்.
நாடா ரின்றி நாட்டாமை இல்லை.
நாடே கொண்டோம் பத்திர காளியே வா!
தரத்தில் உயர்ந்தோம் உன்னாலே!
வரத்தில் வாழ்ந்தோம் தன்னாலே.
நாடார் என்போம் பெருமை யாய்.
கேடில்லை எம்மாலே காளியே நீ வா!
மதித்தே கற்றோம் மரியாதையே!
உதித்தே வந்தோம் உன்னாலே!
உழைப்பால் தான் சயமரியாதை.
தலை நிமிர்ந்தோம் பத்திர காளியே வா!
உலகம் எங்கும் பரவி வாழ்ந்தோம்.
பழகும் தன்மை உண்மை நின்றோம்.
வரம் தந்த தாயே உன்னாலே தான்.
வாழ்கிறோம் மேன்மை பத்திர காளியே வா!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment