Monday, 15 December 2025

நடையா நடைநடந்து

நடையா நடை நடந்து 

சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
நடையா நடைநடந்து
நாடெல்லாம் தான் கடந்து
கல்லும் முள்ளும் நடந்து வந்து
காடு மலை ஏறி நொந்து
மண்டல நாள் விரத மிருந்து
சொந்த சுகம் தான் மறந்து
சன்யாசம் மேற்கொண்டு
சகோதரம் பழகிக் கொண்டு
சமத்துவம் கடைப் பிடித்து
ஏற்றம் ஏழு மலை ஏறி
ஆற்றும் கரடு வழி நடந்து
போற்றும் உன் புகழ் பாடி
பேட்டைத் துள்ளி ஆட்டம் ஆடி
வந்தோமய்யா சபரிமலை
கண்டோமய்யா சாமி மலை.
பசி மறந்து பாட்டுப் பாடி
பதினெட்டுப் படிக ளேறி
இருமுடிக் கட்ட விழ்த்து
பூஜை புனஸ்காரம் செய்து
அபிசேகம் ஆராதனை
அத்தனையும் காட்சி கண்டு
அருள் வேண்டி நடை தாண்டி
பிரசாதம் முடி கட்டி
பின்சென்று படி இறங்கி
உத்தரவு உறுதி வாங்கி
பத்திரமாய் ஊர் திரும்பி
மணி மாலை கழட்டு வோம்
மணி கண்ட சாமியே
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா
சாமி சாமி ஐயப்பா
சரணம் சாமி ஐயப்பா

கவிஞர். கொ.பெ.. பிச்சையா.


No comments:

Post a Comment