Saturday, 13 December 2025

ஐயனார்

வெள்ளிச் சரிகை வேட்டி கட்டி
வெள்ளக் குதிரை ஏறி வாரார்.
வீச்சருவாள் கையில் ஏற்றி
கொல்லம் பரும்புக் காவல் சாமி
நல்ல அய்ய னாரு சாமி
துள்ளித் துள்ளி வாராரு

கருத்த மீசை முறுக்கி விட்டு
கம்பி மாதிரி வளைச்சி விட்டு
மின்னல் சரிகை தலைப்பாக் கட்டி
மிரட்டுஞ் சாட்டை சுழட்டிக் கிட்டு
விரைநது வாரார் அய்யனார்.

ஊருக்கு மேற்கே உசந்த கோபுரம்
உள்ளது கோட்டை அய்யனார் கோவில்
நேரே கிழக்கு கொல்லம் பரும்பு
ஊரே அய்யனார் காவல் வரம்பு.

வேட்டைக்கு என்ன அவசரமோ
சாட்டைக்கு என்ன அவசியமோ
தேடி வந்தோம் கோவிலுக்கு
தேவைக்குத் தானே ஓடி வந்தோம்.

நோய் நொடி இல்லா ஊராக
நீ செய் அய்யா அய்யனார்.
வாடிய விவசாயம் வளம்பெறவே
வகை செய் அய்யா அய்யனாரே.



No comments:

Post a Comment