Wednesday, 17 December 2025

சபரிமலை கோசம்

கார்த்திகை பிறந்திரிச்சி 

கார்த்திகை பிறந்திரிச்சி 
கவலை யெல்லாம் 
மறந்திரிச்சி.
ஆலயங்கள் விழிச்சிரிச்சி
ஆலய மணிகள் ஒலிச்சிரிச்சி
விடியல் வெளிச்சம் தெரிஞ்சிரிச்சி.
ஐயப்பா கோசங்கள்
அகிலமெங்கும் முழங்கிரிச்சி.

சந்தன வாசம் மணந்திரிச்சி
சாஸ்தா கோசம் கேட்டிரிச்சி
வந்தனம் கூறி வீதிகளெல்லாம்
வாழ்த்தொலி முழக்கம் நிறைஞ்சிரிச்சி.
விரதமிருக்கும் பக்தர்கள் கூட்டம்
சரணகோசங்கள் பாடியே
தெருக்களில் வரிசைகள் தொடர்ந்திரிச்சி.

சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா 
வீதி யெங்கும் வாழ்த்துக்கள் 
கோவி லெங்கும் பாடல்கள் 
மாலை போடும் மாட்சிகள் 
காலை முதலேக் காட்சிகள் 
பக்திமயமாய் பஜனைகள்
பக்க வாத்தியங்கள் இன்னிசைகள்.

ஊரெங்கும் குரலோசை
பாரெங்கும் மணி யோசை
ஆலய மெங்கும் பூஜைகள்
ஐயப்பன் புகழ் பாடும் ஓசைகள்.
சரண கீதங்கள் சாஸ்தாவின் வேதங்கள்
சாமி ஐயப்பா சாமி ஐயப்பா
சங்கீத வசனங்கள்
சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
தெருவீதிப் பாட்டுக்கள்.

சந்தனம் குங்குமம் வாசமே
வந்தனம் பொங்கும் கோசமே
மாலை மலர்கள் மணமே
காலைப் பொழுதின் காட்சிகள்.
சபரிமலைப் பயண மந்திரங்கள்
சாஸ்தா வழிப்பயண தந்திரங்கள் 
அதிகாலைக் குளியல்கள்
ஆரோக்கிய வழிபாடு
விதிப்பலம் நிலைப்பாடு.

கார்த்திகை பிறந்திரிச்சி 
கவலை யெல்லாம் 
மறந்திரிச்சி.
ஆலயங்கள் விழிச்சிரிச்சி
ஆலய மணிகள் ஒலிச்சிரிச்சி
விடியல் வெளிச்சம் தெரிஞ்சிரிச்சி.
ஐயப்பா கோசங்கள்
அகிலமெங்கும் முழங்கிரிச்சி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment