Saturday, 27 December 2025

மலையாம் மலையாம் சாமி மலையாம்

மலையாம் மலையாம் சாமி மலையாம்
 மலையாம் மலையாம் சாமி மலையாம்
ன சாமி சபரி மலையாம்__அது
ஐயப்பன் வாழும் மா மலையாம்__அந்த
மெய்யப்பன் தானருள் செய்யப்பனாம்.

விரத மிருந்து இருமுடி கட்டி
வரம் பெற ஐயனின் கோவிலை நாடி
வாபரைத் தொழுது சாபங்கள் கலைந்து
வழிப் பயணம் தொடர்வோம் விழைந்து.

ஏற்றங்கள் ஏறி ஆறுகள் மூழ்கி
பாவங்கள் கழுவி பம்பா நீங்கி
சாமிகள் கூடி சரணம் பாடி
சத்தியப் பயணம் சாஸ்தாவைத் தேடி.

விசாக மாதம் மண்டல பூஜை
விரதமிருந்து கண்டிட ஆசை.
நெய்யபிசேகம் செய்திடும் வாசம்.
வைகாசி நாளில் தொடங்கிடும் கோசம்.

உசபூஜை உச்ச பூஜை படிபூஜை என்று
உவந்து கண்டு அத்தாழ பூஜையும்  அடைக்கும் முன் நடைவாசல் நின்று
ஐயனின் அருளைப் பெறுவோம் மகிழ்ந்து

பந்தள ராஜன் பால்முக வாசன்
கந்தன் சகோதர கருணை பூசன்
உறுவினை யாவும் அவனால் அகன்று
பிறவிப் பயனை அடைவோம் நெகிழ்ந்து.

கார்த்திகை மாதம் நேர்த்தியாய் விரதம்
சாஸ்தாவைக் காண சபரிக்குப் பயணம்.
ஏழுமலை களும் ஏழு பிறவிகளாம்
அழுதா நதியில் கழுவிக் கடப்போம்.

தைத் திங்கள் முதல் நாள் பொன்னம்பலம் மேட்டில்
மகர ஜோதியாய் ஐயப்பன் தரிசனம்
தவர விடலாமோ  நெய்யப்பன் கரிசனம்.

ஐயப்பனை நம்பினார்கு ஐயமில்லை
மெய்யப்பன் சன்னதியே எல்லை.
சாமிசரணம் சொன்னாலே போதுமே
சங்கடங்கள் தீர்ந்தெல்லாம் சுபமாகுமே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



No comments:

Post a Comment