விரும்பும் ஊர் வேடநத்தம்.
வேட நத்தம் ஊர் என்றாலே-- மனம்
விரும்பும் ஊர் எனும் பொருளாம்
நாடு போற்றும் நல்ல ஊராம்--உளம்
நாடும் வசதிகள் கூடும் ஊராம்.
தூத்துக் குடியாம் மாவட்டம் --வளம்
ஏற்றுக் குடியாம் வேடநத்தம்.
வேற்று மைகள் பாராட்டா--உலகம்
போற்றுக் குடியாம் வேடநத்தம்.!
ஊரென ஒன்றாய் சேருவார்-- அன்பில்
உயர்ந்தது தோப்பால் கூறுவார்.
சீரென ஊரைப் போற்றுவார்-- வான்
நேரெனக் கோபுரம் தோற்றுவார்.
சீரென ஊரைப் போற்றுவார்-- வான்
நேரெனக் கோபுரம் தோற்றுவார்.
வேடுவர் மாதை விரும்பியே-- வேலன்
தேடிக் களைத்துத் திரும்பியே.
வேடர் நத்தம் கண்டானே--நந்நீர்
ஓடப் பெருக்கினாள் விசாலாட்சி !
வீர வேடர் நீராவி கண்டு--அவர்
வேட்கை தணிய பருகிட மொண்டு
ஆறிய தாகம் அருமை கொண்டு--தாகம்
தீர்ந்த நத்தம் வேட நத்தம்.
ஊரெனக் குடும்பம் ஒன்றில்-- பந்தம்
தேரெனக் கூடிச் சொந்தம்,
சீரென நகர்த்தும் செம்மை-- மொத்தப்
பேரெனப் புகழ்வார் வேடநத்தம்!
விரிந்தும் பெருகி வளர்ந்தும்- நாளும்!
புரிந்த சமத்துவம் அமைந்து
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்-பரவி
விரைந்து பெருகும் வேடைநகர்.
சுவர்க்கம் என்றால் எங்கே--அது
இருக்கும் வேடைநகர் அங்கே.
கரிய மாலின் கருணையில் --புவி
புதிய சுவர்க்கம் வேடை.நகர்.
காசி விசாலா காமாட்சி ----ஊர்
வாசி விஸ்வ நாதன் ஆசி
நேசி மனமே மாசினி வீழும்--மேவும்
ஆட்சியின் வேடை நகர் வாழி!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
தேடிக் களைத்துத் திரும்பியே.
வேடர் நத்தம் கண்டானே--நந்நீர்
ஓடப் பெருக்கினாள் விசாலாட்சி !
வீர வேடர் நீராவி கண்டு--அவர்
வேட்கை தணிய பருகிட மொண்டு
ஆறிய தாகம் அருமை கொண்டு--தாகம்
தீர்ந்த நத்தம் வேட நத்தம்.
ஊரெனக் குடும்பம் ஒன்றில்-- பந்தம்
தேரெனக் கூடிச் சொந்தம்,
சீரென நகர்த்தும் செம்மை-- மொத்தப்
பேரெனப் புகழ்வார் வேடநத்தம்!
விரிந்தும் பெருகி வளர்ந்தும்- நாளும்!
புரிந்த சமத்துவம் அமைந்து
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்-பரவி
விரைந்து பெருகும் வேடைநகர்.
சுவர்க்கம் என்றால் எங்கே--அது
இருக்கும் வேடைநகர் அங்கே.
கரிய மாலின் கருணையில் --புவி
புதிய சுவர்க்கம் வேடை.நகர்.
காசி விசாலா காமாட்சி ----ஊர்
வாசி விஸ்வ நாதன் ஆசி
நேசி மனமே மாசினி வீழும்--மேவும்
ஆட்சியின் வேடை நகர் வாழி!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
க்ஷ

No comments:
Post a Comment