சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க.
சபரிமலை பாட்டுப் பாடி ஆட்டம் போடுங்க.
ஐயப்பா ஐயப்பா கைகள் தட்டுங்க.
ஆடிப் பாடி தாளம் கொட்டிப் பாட்டுப்
பாடுங்க.
குதுகலமா கொண்டாட்டமா கோசம்
போடுங்க.
கூட்டமாகக் கூடிச்சேந்து பஜனை பாடுங்க.
அந்தவினை இந்தவினை எந்தவினை ஆனாயென்ன.
ஐயப்பனுக்கு மாலை போட்டா பொய்யாப் போகுங்க.
சோதனையா வேதனையா ஏதும் இல்லீங்க.
சொந்தம் பந்தம் எல்லாமே வந்து சேரூங்க.
தொலைஞ்சு போன எல்லாமே துலங்கும்
பாருங்க.
கலைஞ்சு போன சந்தோசமும் கூடி வரூங்க.
ஐயப்பனுக்கு மாலை போட்டா எல்லாம் கூடுங்க.
வீடு வாசல் காடு மனைகள் எல்லாமே
ஆடுமாடுகள் தேடுஞ் சுகங்கள் எல்லாமே
செய்யுந் தொழில்கள் சேவைகள் எல்லாமே.
தொய்யா நலமே தொடரும் எல்லாமே.
ஐயப்பனுக்கு மாலை போட்டா எல்லாமே
வாழுமே.
சொந்த வீடு சொந்தத் தொழில் சொந்தமே எல்லாமே.
சொந்தங்கள் பந்தங்கள் சுகமாக எல்லாமே.
சொந்த முனு எண்ணுவது எல்லாமே சொந்தமே.
வந்தவினை எல்லாமே வந்த வழி போகுமே.
ஐயப்பனுக்கு மாலை போட்டா ஆகாதே
இல்லையே.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment