Sunday, 30 November 2025

கொல்லம்பரும்பு

கொல்லம் பரும்பு

வெல்லங் கரும்பு வாசனை
கொல்லம் பரும்பு ஊரினை
சொல்ல விரும்பும் பாட்டினை
மெல்லிசை அரும்பப் பாடுகிறேன்.
சொல்லிசைப் பிச்சையா சூடுகிறேன்.

நெல்மணம் வாசம் நெடுவயல் தோட்டம்
நல்மனம் பேசும் நடுவனர் கூட்டம்.
நீர்வளம் மேவும் ஏரிகுளங்கள் சூழும்
நேர் குணம் யாவும் சீர்வளம் ஆளும் 
ஓர்ஊர் கூறும் உலகம் கொல்லம் பரும்பு

ஊராளும் தேவியர் சந்தண மாரிகள்
ஊர்காவல்  ஐயன் கருப்பு சாமி கள்
மேலும் உச்சி பத்திர காளிச் செல்வி 
வாழும் ஆளும் நல்லருள் வாரி நல்கி
காக்கும் தெய்வங்கள் வாழி!வாழி!

சுற்றம் ஒன்றாய் பற்றும் நன்றாய்
உற்றம் உறவு உரியோர் வரவாய்
கற்றுக் கனிந்தோர் கடமை பணிந்தோர்.
நல்லோர் கூடி வல்லோர் மேவி
உள்ளோர் எல்லாம் உதவுவார் தேடி.

ஊரென்ற உணர்வு ஊரொன்ற வாழ்வு
யாரேன்று வினவா சீரொன்ற வாழ்வு
ஊரென்ற பேரை மார்தட்டிச் சோல்வார்.
பாரொன்ற வாழ பறைசாற்றி வெல்வார்.
ஏர்த்தொழில் மறவா ஊர்வாழ வாழ்வார்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

இராமேஸ்வரம்.

இராமநாதசுவாமி.

இராமநாத சுவாமியை
நாமமிட்டுச் சேவிக்க
சேமமே நாளெல்லாம்.
ஜெயமாகும் யாவுமே!
அமைதிக்கடல் கரையிலே
அமைந்திருக்கும் மேட்டிலே
ஈசனவர் பூசைக்கு--வணங்கி
எழுப்பிய இரமலிங்கம் 

அனுமனால் அகற்றிடா
ஆழ்வினை லிங்க சாமி
அன்று பூசித்த இராமசாமி
இனறும் பூசை இராமசாமி.
ஓடிக்கோடி தீர்ததங்கள்
உள்ளாடி வந்திட்டோம்!
ஓடாதோ துயரங்கள்!--அருளில்
ஒழியாதோ பகைமைகள்!

அலையாடும் கடலலையை
அடக்கி  வைத்த இராமசாமி.
நிலையில்லா என்னையும்
நின்றுதொழச் செய்தாயே.
ஈழமகள் சீதையை
இலங்கனிடம் மீட்கவே
போரிடப் புறப்பட்டு--ஈசனை
பூஜித்த இராம பூமி .

இராவணன் வீழ்ந்தானோ!
ஈழமகள் மீண்டாளோ!
பாலமிட்டும் தமிழோடு
பண்டுறவு கொள்வோமோ!
போராளி இராமசாமி
சீராள வந்த சாமி.
பாராண்ட இராமசாமி--தமிழ்
நாடாளும் நம்ம சாமி.

கொ.பெ.பி.அய்யா.

சுனாமியும் பதறும்.

சுனாமியும் பதறும்.

சூராவளியோ சுனாமியோ!
நேராதது திருச்செந்தூரோ!
சூரனை வதைத்த வேலுண்டு.
யாரது எதிர்ப்பார் நேர்கண்டு!

மரமாய் நின்ற சூரனை,
இருகூராய்  வகிர்ந்த வேல்வினை,.
கூர்முனை மிரட்டும் கதிர்வினை
நேரெதிர் கொள்ளுமோ சுனாமியும்.

செந்தூ ரென்றால் அஞ்சுமோ!
சேவலும் கொடியும் கெஞ்சுமோ!
மிறட்டும் உருட்டும் சீறலைகள்,
மீறுமோ மாறுமோ போரலைகள்.

எல்லை தொடவும கதறியே
உள்ளே ஓடும் பதறியே
அமைதி யாகியே அடங்கிடும்
அனுமதிக் காக ஒடுங்கிடும்

கவிஞர். கொ. பெ. பிச்சையா.





Sunday, 9 November 2025

செம்மொழி வாழ்த்து.

செம்மொழி வாழ்த்து.

முதலொலியாம் முத்தாம்; வளர்மொழியாம்; 
வாய்த்தயிரு, கண்ணாம், கருவிழியாம்,காலமாம்! 
கன்னல் இனிமை, வளமை, 
இளமை, வழமை 
வாழுந் தமிழாம்.
தனித்தச் சிறப்புத் தமிழ்.
பிறக்கும் பொழுதே 
பிறக்கும் ஒலியில் 
பிறக்கும் உறவும் அம்மாவாம். 
சிறப்பிதுபோல் உண்டோ 
பிறமொழி ஒன்றுமே சொல்லுக! 
கொண்டதும் செம்மொழி தமிழே!.

அறம்பொரு ளின்பம் 
அதன்பின் பெறும்பேறும்,
அன்னப் பெருமை 
அனைத்தும்திறமாய்,
அமைந்தும் வளமாய் 
அவனியில் வாழும் 
அருமைத் தமிழே சிறப்பு.
பன்மொழி ஏற்றுப் பதித்த இலக்கியங்கள், 
வண்பொலி வேற்றி வளர்ந்துமே தன்னிலைத் திண்ணமும் 
தேறியும் முன்னிலைப் போற்றியும் 
செந்தமிழ் வாழி வழுத்து!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

Friday, 7 November 2025

வண்டிக்காரன்

வண்டிக்காரன்.

நானொரு வண்டி நீயோ ஓட்டி!
என்னை எங்கே ஓட்டிப் போகிறாய்?
ஆன்மா உள்ளே இறையோ நீ!
ஆட்டிப் படைப்பவன் நீயோ!

பூட்டிய வண்டி நான் உடலாக
மாட்டிய காளைகள் உயிராக,
வண்டிக் காரன் ஓட்டுகிறாய்.
பயணம் எங்கே செலுத்துகிறாய்.

வண்டிக்காரா வண்டிக்காரா"
வண்டியை ஓட்டும் வண்டிக்காரா!
சண்டிக் காளை நானானுலும்,
சுண்டி ஓட்டுநீ வகையாக.

வண்டி மாடுகள் எப்படியோ!
வண்டிக் காரன் நீ தானே.!
சேரும் ஊரை சேர்ப்பது நீ
செல்லும் முறைமை பொறுப்பு.நீ

திமிரும் எருதுகள் விலகினால்
அமரும் உன்னிலை பிசகினால்
ஓட்டும் பாதை தவறினால் 
ஓட்டி நீதான் தவறிவிட்டாய்.

நல்லதும் கெட்டதும் நீ பொறுப்பு.
அல்லல் நேராதே ஓட்டு நீ!
விடைதான் என்ன இரகசியமோ--வண்டி
அடைவதும் ஆவதும் உன்வசமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 4 November 2025

தியாகத் திருநாள்

தியாகத் திரு நாள்

இஸ்மாயில் அம்சம் காணுங்கள்--அவன்
இஸ்ஸலாமிய வம்சந் தானுங்க ள்
அஸ்ஸலாமு அலைக்கம லாமுஙாகள்
அன்புடன்
அனைவர்க்கும் வணக்கம் 
சொல்லுங்க ள்

துல்ஹஜ்த் திங்களது பத்தாம் நாளில்
--அன்று
பக்ரூ ஈத் கொண்டாடும் திருநாளில்
அல்லாவின் கருணைக் கொடை நந்நாளில்
அனைவர்க்கும் பாய்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்

நபித்தூதன் இப்ரஹிம் தவப் புதல்வன் 
இஸ்மாயில் அல்லாவின் கட்டளையாலே
தலை கொடுத்துத் தனை ஈந்தத் தியாகத் திருநாள்
நிறைந்த பக்தி மெச்சி விரைந்த அல்லா வாழி!

தூயபக்தி வாழ்த்தி அல்லா பக்ரு போது மென்றார்.
நேயமது மனிதகுணம் போற்றி நின்றார்
குர்பானிச் சமபந்திக் கூடி உண்ணுவோம் 
சர்வமும் சமமாகி வாழ்ந்திட லாமே.

அனைவரும் சகோதரரே!
அன்பு மொழிப் பாயே!
அப்பனென்றும் மாமனென்றும்
அத்தனையும் உறவானோம்.
சொந்தமான இரத்தங்களே!
பந்தமான உறவுகளே!
எந்தபேதம் இல்லாமலே
இந்த மண்ணில் வாழுவோமே!

தியாகத்தின் திருநாளே!
தேவனல்லாப் பெருநாளே!
இறைத்தூதன் இப்ரஹிமே!
இதயங்கொள் நந்நாளே!
மெக்காவுக்கும் மதினாவுக்கும்
முகமத் நபி யாத்திரையே,
இக்காலும் ஹஜ்பயணம்
இறைக்கடன் திருப்பயணம்.

இஹ்ஹாமை அணிந்திருப்பர்.
எல்லோரும் சமமென்பர்,
ஒற்றுமை விளக்கமாக
ஹஜ்ஜுக்குப் போய்வருவர்
கஃபாவைச் சுற்றிவந்தால்,
சம்சம் நீர் குடித்துவிட்டால்,
பிறவிப்பயன் பெற்றிடலாம்;
பிறவிக்கடல் நீந்திடலாம்.

ஹஜியாக ஆகிவிட்டால்,
கடமைகள் நிறைவுற்றால்,
அல்லாவின் அமைதியில்;
அவன் சரண் ஆகிடலாம்.

கவிஞர். கொ.பெ.பிச்சையா.

மெட்டு:இறைவனிடம் கையேந்துங்கள்

பின்குறிப்பு
பி.கு::பக்ரு--செம்மறியாடு.
இஹ்ஹாம--ஹஜ்பயணச் சீருடை.
கஃபா--மெக்கா புனிதத்தலம்.
சம்சம்--இஸ்மாயில் தோற்றுவித்தப் புனித நீரூற்று.
ஹஜி---ஹஜ் பயணம் சென்று வந்தவர்.



Saturday, 1 November 2025

குட்டிக் குட்டி குமரய்யா.

குட்டிக் குட்டி குமரய்யா!

குட்டிக் குட்டி குமரய்யா!
குன்றம் ஆடும் வேலய்யா!
அப்பனுக்குப் பாடம் சொன்ன,
சுட்டிப் பையா சுப்பையா.!

சிவனோட நெற்றிக்கண்ணில்,
அவதரித்த பாலய்யா!
சரவணப் பொய்கையில்,
அறுஉருவாய் ஆறுமுகா!

தேவர் குலம் காப்பதற்கே,
சிவப் பொரிகளாய் தாமரையில்,
சிவபாலன்கள் அறுவராக,
அவதரித்த கார்த்திகேயா!

கார்த்திகைப் பெண் சேர்ததணைத்த
கந்தா நீ கந்தய்யா.
கணபதிக்குப் பின் பிறந்த,
கந்தசாமி முருகய்யா

மயில் ஏறும் வாகனனோ!
மலை வாசப் பிரியவனோ!
மலை வாழும் குறவள்ளி,
மனம் நேச வேடுவனோ!

குறத்தி மகள் வள்ளி யையே!
விருத்தனாக வேடனாக,
காதல் வலை வீசி நீயே!
கலவை மணம் செய்த வேலா!

காதல் விளை ஆட்டமாடி,
வாதம் செய்து வம்பாடி,
அண்ணன் துணை கொண்டாடி 
கலாட்டா செய்த வேடன் நீ!

காதல் மணம் விரும்பியவா!
மோதல் குணம் நிறம்பியவா!
சிறைபிடித்து மணம் முடித்து,
புரட்சி மணம் புரிந்த முருகா!

காதலுக்கு வாழ்வளித்து,
கலப்பு மணம் ஆதரித்து,
தமிழுக்குப் பெருமை சேர்த்த,
அமுதன் நீ ஆண்டவா!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.