செம்மொழி வாழ்த்து.
முதலொலியாம் முத்தாம்; வளர்மொழியாம்;
வாய்த்தயிரு, கண்ணாம், கருவிழியாம்,காலமாம்!
கன்னல் இனிமை, வளமை,
இளமை, வழமை
வாழுந் தமிழாம்.
தனித்தச் சிறப்புத் தமிழ்.
பிறக்கும் பொழுதே
பிறக்கும் ஒலியில்
பிறக்கும் உறவும் அம்மாவாம்.
சிறப்பிதுபோல் உண்டோ
பிறமொழி ஒன்றுமே சொல்லுக!
கொண்டதும் செம்மொழி தமிழே!.
அறம்பொரு ளின்பம்
அதன்பின் பெறும்பேறும்,
அன்னப் பெருமை
அனைத்தும்திறமாய்,
அமைந்தும் வளமாய்
அவனியில் வாழும்
அருமைத் தமிழே சிறப்பு.
பன்மொழி ஏற்றுப் பதித்த இலக்கியங்கள்,
வண்பொலி வேற்றி வளர்ந்துமே தன்னிலைத் திண்ணமும்
தேறியும் முன்னிலைப் போற்றியும்
செந்தமிழ் வாழி வழுத்து!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment