குட்டிக் குட்டி குமரய்யா!
குன்றம் ஆடும் வேலய்யா!
அப்பனுக்குப் பாடம் சொன்ன,
சுட்டிப் பையா சுப்பையா.!
சிவனோட நெற்றிக்கண்ணில்,
அவதரித்த பாலய்யா!
சரவணப் பொய்கையில்,
அறுஉருவாய் ஆறுமுகா!
தேவர் குலம் காப்பதற்கே,
சிவப் பொரிகளாய் தாமரையில்,
சிவபாலன்கள் அறுவராக,
அவதரித்த கார்த்திகேயா!
கார்த்திகைப் பெண் சேர்ததணைத்த
கந்தா நீ கந்தய்யா.
கணபதிக்குப் பின் பிறந்த,
கந்தசாமி முருகய்யா
மயில் ஏறும் வாகனனோ!
மலை வாசப் பிரியவனோ!
மலை வாழும் குறவள்ளி,
மனம் நேச வேடுவனோ!
குறத்தி மகள் வள்ளி யையே!
விருத்தனாக வேடனாக,
காதல் வலை வீசி நீயே!
கலவை மணம் செய்த வேலா!
காதல் விளை ஆட்டமாடி,
வாதம் செய்து வம்பாடி,
அண்ணன் துணை கொண்டாடி
கலாட்டா செய்த வேடன் நீ!
காதல் மணம் விரும்பியவா!
மோதல் குணம் நிறம்பியவா!
சிறைபிடித்து மணம் முடித்து,
புரட்சி மணம் புரிந்த முருகா!
காதலுக்கு வாழ்வளித்து,
கலப்பு மணம் ஆதரித்து,
தமிழுக்குப் பெருமை சேர்த்த,
அமுதன் நீ ஆண்டவா!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment