சூராவளியோ சுனாமியோ!
நேராதது திருச்செந்தூரோ!
சூரனை வதைத்த வேலுண்டு.
யாரது எதிர்ப்பார் நேர்கண்டு!
மரமாய் நின்ற சூரனை,
இருகூராய் வகிர்ந்த வேல்வினை,.
கூர்முனை மிரட்டும் கதிர்வினை
நேரெதிர் கொள்ளுமோ சுனாமியும்.
செந்தூ ரென்றால் அஞ்சுமோ!
சேவலும் கொடியும் கெஞ்சுமோ!
மிறட்டும் உருட்டும் சீறலைகள்,
மீறுமோ மாறுமோ போரலைகள்.
எல்லை தொடவும கதறியே
உள்ளே ஓடும் பதறியே
அமைதி யாகியே அடங்கிடும்
அனுமதிக் காக ஒடுங்கிடும்
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment