Sunday, 30 November 2025

கொல்லம்பரும்பு

கொல்லம் பரும்பு

வெல்லங் கரும்பு வாசனை
கொல்லம் பரும்பு ஊரினை
சொல்ல விரும்பும் பாட்டினை
மெல்லிசை அரும்பப் பாடுகிறேன்.
சொல்லிசைப் பிச்சையா சூடுகிறேன்.

நெல்மணம் வாசம் நெடுவயல் தோட்டம்
நல்மனம் பேசும் நடுவனர் கூட்டம்.
நீர்வளம் மேவும் ஏரிகுளங்கள் சூழும்
நேர் குணம் யாவும் சீர்வளம் ஆளும் 
ஓர்ஊர் கூறும் உலகம் கொல்லம் பரும்பு

ஊராளும் தேவியர் சந்தண மாரிகள்
ஊர்காவல்  ஐயன் கருப்பு சாமி கள்
மேலும் உச்சி பத்திர காளிச் செல்வி 
வாழும் ஆளும் நல்லருள் வாரி நல்கி
காக்கும் தெய்வங்கள் வாழி!வாழி!

சுற்றம் ஒன்றாய் பற்றும் நன்றாய்
உற்றம் உறவு உரியோர் வரவாய்
கற்றுக் கனிந்தோர் கடமை பணிந்தோர்.
நல்லோர் கூடி வல்லோர் மேவி
உள்ளோர் எல்லாம் உதவுவார் தேடி.

ஊரென்ற உணர்வு ஊரொன்ற வாழ்வு
யாரேன்று வினவா சீரொன்ற வாழ்வு
ஊரென்ற பேரை மார்தட்டிச் சோல்வார்.
பாரொன்ற வாழ பறைசாற்றி வெல்வார்.
ஏர்த்தொழில் மறவா ஊர்வாழ வாழ்வார்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment