தியாகத் திரு நாள்
இஸ்மாயில் அம்சம் காணுங்கள்--அவன்
இஸ்ஸலாமிய வம்சந் தானுங்க ள்
அஸ்ஸலாமு அலைக்கம லாமுஙாகள்
அன்புடன்
அனைவர்க்கும் வணக்கம்
சொல்லுங்க ள்
துல்ஹஜ்த் திங்களது பத்தாம் நாளில்
--அன்று
பக்ரூ ஈத் கொண்டாடும் திருநாளில்
அல்லாவின் கருணைக் கொடை நந்நாளில்
அனைவர்க்கும் பாய்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்
நபித்தூதன் இப்ரஹிம் தவப் புதல்வன்
இஸ்மாயில் அல்லாவின் கட்டளையாலே
தலை கொடுத்துத் தனை ஈந்தத் தியாகத் திருநாள்
நிறைந்த பக்தி மெச்சி விரைந்த அல்லா வாழி!
தூயபக்தி வாழ்த்தி அல்லா பக்ரு போது மென்றார்.
நேயமது மனிதகுணம் போற்றி நின்றார்
குர்பானிச் சமபந்திக் கூடி உண்ணுவோம்
சர்வமும் சமமாகி வாழ்ந்திட லாமே.
அனைவரும் சகோதரரே!
அன்பு மொழிப் பாயே!
அப்பனென்றும் மாமனென்றும்
அத்தனையும் உறவானோம்.
சொந்தமான இரத்தங்களே!
பந்தமான உறவுகளே!
எந்தபேதம் இல்லாமலே
இந்த மண்ணில் வாழுவோமே!
தியாகத்தின் திருநாளே!
தேவனல்லாப் பெருநாளே!
இறைத்தூதன் இப்ரஹிமே!
இதயங்கொள் நந்நாளே!
மெக்காவுக்கும் மதினாவுக்கும்
முகமத் நபி யாத்திரையே,
இக்காலும் ஹஜ்பயணம்
இறைக்கடன் திருப்பயணம்.
இஹ்ஹாமை அணிந்திருப்பர்.
எல்லோரும் சமமென்பர்,
ஒற்றுமை விளக்கமாக
ஹஜ்ஜுக்குப் போய்வருவர்
கஃபாவைச் சுற்றிவந்தால்,
சம்சம் நீர் குடித்துவிட்டால்,
பிறவிப்பயன் பெற்றிடலாம்;
பிறவிக்கடல் நீந்திடலாம்.
ஹஜியாக ஆகிவிட்டால்,
கடமைகள் நிறைவுற்றால்,
அல்லாவின் அமைதியில்;
அவன் சரண் ஆகிடலாம்.
கவிஞர். கொ.பெ.பிச்சையா.
மெட்டு:இறைவனிடம் கையேந்துங்கள்
பின்குறிப்பு
பி.கு::பக்ரு--செம்மறியாடு.
இஹ்ஹாம--ஹஜ்பயணச் சீருடை.
கஃபா--மெக்கா புனிதத்தலம்.
சம்சம்--இஸ்மாயில் தோற்றுவித்தப் புனித நீரூற்று.
ஹஜி---ஹஜ் பயணம் சென்று வந்தவர்.
No comments:
Post a Comment