Monday, 15 December 2025

சபரி யாத்திரை


சபரி யாத்திரை.

சாமி சாமி சாமி சரணம்.
சரணம் சரணம் சாமி சரணம்.
சாமி தூரமோ!பயணம் எங்கோ!
சபரி மலைக்கே சாமி பயணமோ!

விரதம் இருந்து இருமுடி கட்டி
சபரி யாத்திரை.
தவயோகி ஐயப்பன் காணும் யாத்திரை
நவயோகம் பெறுவதற்கே
சரணம் ஐயப்பன்
 
தர்மசாஸ்தா சாமி சன்னதிக்குப் 
பயணம் தொடருது.
கர்ம பாவம் களைவதற்கே 
பயணம் தொடருது.
எரிமலை ஏற்றம் முன்னே
பேட்டைத் துள்ளுது. 
வாபரை வணங்கியே
பயணம் தொடருது.

சபரிமலை சாஸ்தாவுக்கே
சரணம் சொல்லுது.
மணிகண்ட சாமிக்கே
சரணம் பாடுது.
எருமேலி ஏறிப் பின்னே!
ஏழுமலையே!
சாமி சாமி சரணம் பாடி
சன்னதி நோக்கி

பேரூர் தேட்டை ஓடை
கண்டுமேக் காலாற்றி
யாத்திரையே பெரும்பாதை
பயணம் தொடருது.

அடுத்து வரும் அழுதாநதி நீராடி
அழுதாமலை ஏற்றம் ஏறுது.
அழுதாமலை கல்லெடுத்து
பயணம் தொடருது.
சாமி ஐயப்பன் நடந்து சென்ற
சபரிமலைப் பாதைஇதுவே.
சபரி பீடம் தரிசனமும் கண்டு நடந்தது.

இஞ்சிப் பாறை ஏற்றம் ஏறி
கரிமலை ஏற்றம்.
கொஞ்சம் இளைப்பாறிப்பின்
பம்பாநதி நீ ராடி நீலி மலை ஏற்றம்
சன்னதியை நெருங்க நெருங்க
சரண கோசங்கள்.
சாமி சாமி என்றே சாஸ்தா முழக்கங்கள்
சரணம் சரணம் என்றே 
ஐயப்பாப் பாடல்கள்.

ஹரிஹர புத்திரன்  அவதாரமே
அரக்கி மஹிசாவை வதம் செய்யவே.
அழுதாமலை கல்கொண்ட சாமிகளுமே
அரக்கி மஹிசா குன்றம் நோக்கி
வீசி எறிந்தனர்___அரக்கியை
வதம் செய்த அடையாளம் 
விதம் செய்தனர்.

சன்னதியில் சரணம் ஆனார்
சாமி ஐயப்பா.

நெய் மணக்கும் சபரிமலை
சாமி ஐயப்பா
பொய் மறந்தார் சபரிமலை
சாமி ஐயப்பா.
பிரம்மச்சரியம் பற்றி வந்தார்
சாமி ஐயப்பா
அறம் போற்றி விரதம் கொண்டார்
சாமி ஐயப்பா.
பதினெட்டுப் படியேறி சாமி ஐயப்பா 
பார்வை கொண்ட பயன் கண்டார்
சாமி ஐயப்பா.
யோகப் பட்டம் கட்டிக் கொண்டு
சாமி ஐயப்பா
தவக்கோலம் தான் கொண்டார்
சாமி ஐயப்பா.
இருமுடி தான் பிரித்து சாமி ஐயப்பா 
பெறும் பூஜை ஏற்றுக்கொண்டார்
சாமி ஐயப்பா.
சந்தனம் தான் குளித்து சாமி ஐயப்பா 
வந்தனம் ஏற்றுக் கொண்டார் சாமி 
ஐயப்பா 
அருள் வழங்கி ஆசி தந்தார் சாமி ஐயப்பா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment