சாமி ஐயப்பா.
சபரி மலையின் சாஸ்தா ஐயப்பன்
பந்தள ராஜன் பரிசென ஐயப்பன்
சொந்தம் பக்தர்க்கு சுபந்தரும் ஐயப்பன்
அவதார புருஷன் அரக்கியின் தும்சன்
தவக்கோலம் பூண்ட சபரி வாசன். யோகப் பட்டம் காலில் கட்டி
தவயோகி யானான் சபரிமலை நேசன்.
சீதையைத் தேடிய சீதா இராமன்
சபரி ரிசியைச் சந்தித்தான் பசியில்
நெல்லிக் கனிகளை சுவைத்துத் தேர்ந்து
அள்ளிக் கொடுத்தாள் சபரி ரிசியாள்.
சபரி ரிசியாள் தவமிருந்த மலைதான்
சபரிமலை யாம் சாமி மலையாம்.
ஐயப்பா சாமியும் அதைத்தான் தேர்ந்து
தவம் மேற்கொண்டார் மணிகண்டனாக.
மோகினி யான ஹரிமேல் மோகம்
தாகம் கொண்டு ஹரனவர் இணைய
கைகளில் அவதரித்தார் கையப்பன்
ஹரிஹர சுதனாய் ஐயப்ப மெய்யப்பன்.
பந்தள ராஜன் அரண்மனை வளர்ந்து
பாசாங்குச் சிறுதாயரர் பொறாமை புரிந்து
சபரிமலையில் தவம் மேற்கொண்டார்
ஐயப்ப சாமியாகி அருள் பாலிக்கிறார்.
சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா
சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment