கிராம தேவதைகள்
சும்மா இல்லை சுகமாக வாழ்கிறோம்.
சந்தனம் மணக்கும் சந்தன மாரிகள்
வந்தனம் உமக்கே வாழ்த்து கிறோம் வாழி!
உச்சிமகா காளி வடக்குவாச் செல்வி
உச்சம் தந்த தெய்வங்களே வாழி!
அஷ்டக் காளிகள் அவதாரத் தாய்களே
இஷ்டமான எங்கள் தெய்வங்களே வாழி!
எல்லைக் காவல் கருப்பச் சாமிகள்
தொல்லை களில்லை நோய்க ளில்லை
வல்ல தெய்வங்கள் வாழும் வல்லூராம்
கொல்லம் பரும்பூரம் நல்லூராம் வாழி!
எத்தனைத் தாய்கள் எமைப் பெற்றாலும்
அத்தனைத் தாய்களும் நீவீர் அம்மா.
ஒத்தணைத்த ஒருதாய் பிள்ளை களாம்
சித்தம் ஒன்றி வாழ வைத்தீர்கள் வாழி!
நீர்வளம் நிலவளம் சீர்பெற்ற நல்லூராம்
போர்த் தளமாம் வீரமண் கொல்லம் பரும்பாம்.
பஞ்சம்பசி கொஞ்சமும் இல்லா ஊராம்
மிஞ்சியதும் கொடுத் துதவும் நல்லூராம் வாழி.!
படித்தவர்கள் படிப்பாளிகள் மேதாவிகள்
தடித்தசொல் வீசாதார் தாழவும். பேசாதார்
முடிக்கும் செயலே முனைவ ரென்றும்
விடியல் கண்ட வாழ்வே வாழி!வாழி!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment