தமிழே அழகே வாராய்.
செந்தூர் வாழும் வேலவனே!
சிந்தை நிறைந்த மால்மருகா!
சிவனே தந்த செல்லமே-தமிழ்
தவனே பார்வதி புதல்வா.
தமிழ்க் குடிக் காக்கும் முருகா!
திருச் செந்தூர் ஆக்கின இறைவா!
சூரனை வென்ற வீரா—தமிழ்
போராளி நீயே தலைவா.!
வேலினைக் கையிற் கொண்டு
விழிபன் னிரண்டிலுங் கண்டு
தமிழினம் காத்து அருளவே—தமிழ்
குலமென மண்ணில் வாழவே.
தாமரை மலர்கள் ஆறாய்,
மலர்ந்தாய் சிவனின் கூறாய்.
மொத்தம் அள்ள கார்த்திகை—தமிழ்
கந்தன் நீயும் அவதரித்தாய்.
இழிவெனச் சாதி இல்லையே
மலைமகள் மணந்த சுப்பையா.
வேடன் விருத்தன் ஆகவே—தமிழ்
நாடனே காட்சி அழகனே.
தமிழே அழகே வாராய்.
அமுதே உயிரே வாராய்
முதலே மொழியே நீயே–தமிழ்
ஆசான் அரசே வாராய்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment