யாமிருக்கப் பயமேன்?
ஏதும் செய்யத் தெரியவில்லல
வாதம் செய்ய நாதி இல்லை.
நாளும் பொழுது நகரவில்லை
வாழும் வகை புரியவில்லை.
என்னைச் சுற்றி ஆபத்து,
எத்தனையோ காத்திருக்கு.
உன்னையும் நினைப்பதற்கு
உள்ளம் ஏது வேலவா!
விலைவாசி ஏறுது
வெயில் போலக் காயுது.
வறுமை சுட்டு வாட்டுது.
வகை யென்ன கந்தைய்யா.
ஏறி நானே முயல்கிறேன்.
வாரிக் கீழே பாய்கிறேன்.
தோற்று நானே ஓய்கிறேன்.
தேற்று என்னைக் குமரனே!
செல்லும் வழி நெரிசலில்
சிக்கும் போக்கு வரத்தினில்
காலம் வீணேச் சாவதில்
கவலையாச்சே கடவுளே!
௨ரிமம் பெறாச் சிறுசுள்
ஓட்டுது பார் மோட்டார்கள்.
பத்திரமா உலவி வர
உயிருக் கென்ன நிச்சயம்.
சிவனே என்று கிடக்கவும்,
சேவை செய்ய மறுக்கவும்,
மூலை தேடிப் படுக்கவும்,
முடியவில்லை முருகனே!
உச்சி வெயில் தாக்குதே!
மச்சு வெப்பம் இறங்குதே!
விசிறி ஆட மறுக்குதே!
வேகிறேனே சாமியே!
வரவில் இல்லை மிச்சமே
உறவில் இல்லை பச்சமே
விதி திருத்தி வாழவே
கதியருள்க கடம்பனே!
யாமிருக்கப் பயமேன்
காமிக்கிறாய் கைகளேன்?
நீயிருப்பாய் சிலையாக.
நானென்ன நிலையோ சொல்.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment