Thursday, 9 January 2025

அறுபடை வீடு.

சென்னை வாசி சிங்காரன்.

தென் பழனி போகாதார் 
வட பழனி தேடுங்கள்.
தங்க மயில் ஆண்டியவன்
தரிசனமும் நாடுங்கள்.

திருச்செந்தூர் காணாதார்
சிறுவாபுரி செல்லுங்கள்..
வெற்றி வேல் அருட்கோலம்-
பற்றி வளம் பெருக்குங்கள்.

மன்றம் அது திருக்குன்றம்
மணக்கோலம் பார்க்காதார்,
குன்றத்தூர் நாடுங்கள்.
கண்டு மனம் நிறையுங்கள்.

கழுகுமலை அறியாதாரா,
கந்தக்கோட்டம் வாருங்கள்.
அழகனவன் திருக்கோலம்-
அமைந்த புகழ் காணுங்கள்.

திருத்தணிகை மலையேறா,
வருத்தங்கள் தணித்தாறா,
திருமணம் செய்ய நலம்-,
பொருத்தமது திருத்தலம்.

பழம் உதிர்த்துப் பாட்டிக்கு
பாடம் சொன்ன சோலைபாரார்
குரோம்பேட்டை குமரக்குன்றம்
வரம்பெறும் திருமன்றம்.

அறுபடை வீடும் அங்கே,
அமைந்த பெருஞ் சென்னை.
எல்லாம் அது பெசனட் நகர்
எங்கேயும் அலையாதீர்.

கொ.பெ.பி.அய்யா.










No comments:

Post a Comment