ஒரு குயிலின் குரல்—இயற்கை வாழ்த்து.
இயல்பாம் இயக்கம் இயற்கை யுனது
செய்பருவச் சீரே சிறப்பு.
பருவங்கள் சீரே சமமானால் சிறப்பாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------
அறிவினிற் தேடல் செயற்கை வியப்பு
அனைத்தும் இயற்கை யளிப்பு.
பொருள்:மனிதன் தன் அறிவால் தேடிக்காணும் பயன்தரும்
செயற்கை விந்தை விளைவுகள் அனைத்தும் இயற்கை
அளித்தக் கொடையே!
----------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை யருளும் செயற்கைப் பயன்கள்
நயக்க அணிசெய் மலர்.
பொருள்:நமக்குக் கிடைத்துள்ள அறிவியல் கண்டுப் பிடிப்புக்கள்
எல்லாம் இயற்கைக்கு நாம் அணிவிக்கும் நன்றி மலர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
கோபத்துக் காளாகாத் தேடல் முடிவலோ
பாவங்கள் இல்லாப் பயன்
பொருள்: இயற்கையின் கோபத்திற்கு ஆளாகாமல் மனிதன்
ஆய்ந்து தேடும் பயன்களால் எந்தக் குற்றமும் நேராது.
----------------------------------------------------------------------------------------------------------------
குமுறலுஞ் சீறலும் சீண்டா(து) அறிவால்
அமுதங் கடைவம் நலம்.
பொருள்:இயற்கையின் இயல்புக்கு மாறான அறிவியல்
தேடல்களை மேற்கொண்டு அதனைச்சீண்டிவிட்டு
அதன் குமுறலை விளைவிக்காமல் அதனிடம்
உயிர் காக்கும் அமுதம் போன்ற பொக்கிசங்களைத்
தேடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------
செயற்கை விளைந்திடும் சீரியப் பொறிகள்
இயற்கை யருளியக் கொடை.
பொருள்:தேடல் அறிவால் செயற்கை விளைத்த அற்புதக்
கருவிகள் எல்லாம் இயற்கை நமக்களிதக் கொடை.
----------------------------------------------------------------------------------------------------
வானத்துத் தேடல் வளர்ஞானக் கூடல்எம்
மானவர் பெற்ற கொடை
பொருள்: வானில் மேற்கொள்ளும் ஆய்வுகளும் அதற்கான
ஞானமும் நாளுக்கு நாள் கூடுவதும் வானம் தன்னுள் ஒளித்து
வைத்துள்ள அளவிடமுடியாச்செலவங்களே!
--------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை கெடுக்கா இயல்புகள் ஊக்கும்
செயற்கையால் சேர்ப்போம் சிறப்பு.
பொருள்:நாம் இயற்கையைப் பகைத்துக் கொள்ளாமல்
இன்னும் பல பல உலகங்களைக் கண்டறிவோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------
காப்போம் இயற்கையைக் கண்ணென, நம்மையும்
காப்ப (து) இயற்கையே காண்!!
பொருள்:வளங்கள் நிறைதுள்ள இயற்கையை நாம்
காப்பது நம் பொறுப்பானால்.இயற்கை நம்மைக் காக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ட பலன்களைக் காணிக்கை ஆக்கியற்கை
தண்டனை தாரா(து அறி
பொருள்:நாம் நம் அறிவால் இயற்கையில் தேடிக்கண்ட
அத்தனை செயற்கைப் படைப்புக்களையும் இயற்கை
எனும் இயற்கைக்கு காணிக்கையாகப் படைப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கொ.பெ.பி.அய்யா.
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment