நாடார் குல தேவி பத்திரகாளி !
கொல்லம் பரும்பூர் வாழும்
பத்திரகாளித் தாயே!வாழி!
நல்லருள் பெய்து குலம் வாழ வாழி!
நாடார் குல தேவி நீ வாழி!
வணிகத் தொழில் வாழ்வே வாழி!
வணிக வாணிப குலத்தாய் வாழி!
குலதேவி ஆளும் நிலமே வாழி!
பலமே தமிழ் குடி நாடார் தாயே வாழி!
உனதருள் பெற்றோம் அம்மா வாழி!
உலகம் பரவினோம்உன்னால் வாழி!
எம்நிலை நந்நிலை காக்குந்தாய் நீ!
தம்தர்மம் போற்றி வாழ்வே நீ வாழி
துலாக் கோல் வரம் தந்தாய் வாழி!
துணை நீயே உரம் ஈந்தாய் வாழி!
உலக விலாசம் நீ யெம்தாயே நீ!
குலமெம்மை ஏற்றிய தாயே வாழி!
எம்மைத் தினமும் காக்கிறாய் வாழி
செம்மைக் கனமும் ஆக்கினாய் வாழி
ஞாலம் முழுதும் ஆளும் வாணிபம் நீ
தூலம் வலிமை தாயே நீ புகழே வாழி
செழுமை எம்மை சீராக்கி வாழி!
வளமை செம்மை வாழ் வாக்கி வாழி!
எளிமைத் தன்மை வலிமை ஆக்கி நீ!
நிலைமை உயர்வு செய்தாய் நீ வாழி!
அறம் தழைய வாழ் வளித்தாய் வாழி!
திறம் பெற வளம் கொடுத்தாய்வாழி!
உழைக்க உடல் நலம் உரமும் தந்தாய் நீ!
தழைக்கக் காக்க வரம் தந்தாய் நீ வாழி !
வாழ வைக்கும் அம்மா வாழி நீ!
தாள் பணிந்தோம் காக்க வாழி நீ!
எங்கெங்கு வாழ்ந் தும்அங்கங்கு நீ!
தங்கங்கும் வாழ்வே வழி நீ!வாழி நீ!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment