எங்கே தேடுவேன்?
எங்கே தேடுவேன் தாயை
எங்கே தேடுவேன்?
பத்திர காளி அவளை
எங்கே தேடுவேன்.
நல்ல குலம் ஆளும்
நாடார் காவல் தெய்வம்
குலதேவி பத்திரகாளியை
கொல்லம் பரும்பில் காண்கிறேன்
அறிவாய் அமர்ந்து ஆட்சி செயயும்,
அன்பாய் கனிந்து ஆனந்தம் அளிக்கும்.
நாடார் பேணி நல்குலம் காக்கும்
நல்ல தெய்வம் பத்திரகாளியை
கொல்லம் பரும்பில் காணுங்கள்.
அருவமாகவே ஆற்றல் படைக்கும்.
இறைவியாகவ காத்து அருளும்.
ஐந்தின் ஆளுமை அவளே நடத்தும்.
ஆளும் பத்திரகாளித் தேவியை
வாழ வாழ்த்திப் பாடுங்கள்.
எண்ணம் ஏவல் எல்லாம் தாயே!
ஈவு இரக்கம் சொல்லும் காளியே!
உண்மை ஊக்கம் உணர்வின் தேவியே
உயர்வின் ஆக்கம் பத்திர காளியே!
ஒழுகும் முறையும் ஓதும் நலமே.
பழகும் விதமும் பரிந்திடும் குலமே.
அழகும் ஆய்ந்து தேர்ந்திடும் வளமே.
அருளும் தெய்வம் பத்திரகாளியே!
வாழ்வியம் பற்றிட அம்மா உதவுவாள்.
வாழ்வும் காத்திட பாதையும் காட்டுவாள்
ஆளுமை மேம்பட செம்மை யாக்குவாள்.
அனைத்தும் அவளே அன்னை பத்திரகாளியே!
புத்தியும் சித்தியும் சத்தியம் அருள்வாள்
சக்தியும் செயலில் உத்தமம் தருவாள்
முக்திக்கு வழியும் நிச்சயம் செய்வாள்
வித்தக மனதே தானாவாள் பத்திரகாளி.
ஆன்மா அவள்தான் தானென உள்ளாள்
ஆழ்ந்தே உள்ளம் தானெனக் கொள்வாள்
தங்கும் கொல்லம் பரும்பில் வாழும்
பங்கம் வெல்வாள் பத்திரகாளி நாளும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment