கழுத்தில் மணிமாலை,
மணிகண்ட சாமிக்கு.
அழகிய திருமுகம்,
ஐயப்பன் சாமிக்கு.
ஆணுக்கும் ஆணுக்கும்,
அவதாரம் ஐயப்பன்.
அரிகர புதல்வனாக,
தவக்கோலம் ஐயப்பன்.
அவன் வரலாறு படிபாபோம் நாமே
அவன் அருளதனை பெறுவோம் நாமே
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
குழந்தை வேண்டி வருந்தியப் பந்தளன்,
அழுதிடும் குழந்தை அரவம் கேட்டான்..
அருகிய அரசன் அள்ளி முகர்ந்தான். ஆனந்தம் பெருகி ஆசை முத்திட்டான்..
துள்ளிக் கொண்டாடி வீடு விரைந்தான்.
வெள்ளித் தங்கம் அள்ளிக் குவித்தான்.
அரண்மனை முழுக்க விழா எடுத்தான.
இருகரமள்ளி ஏழையர்குக் கொடுத்தான்
இரண் டாவது மனைவி பந்தள ராணி
வேண்டா வெறுப்பா கண்டாள் கோணி
தன்குல வாரிசுத் தடங்கல் நினைந்தாள்
வன்ம வஞ்சனை மந்திரிக் கலந்தாள்.
வாராத் தலைவலி வந்ததோ!
வந்ததாக நடித்தாள்.வஞ்சகி.
பெறாத மகனான பிள்ளையை,
பலியிட முடித்தாள்.வஞ்சனை..
புலிப்பால் கேட்டொரு கதையை, தொடுத்தாள்.பாதகி சண்டாளி.
தாய்போல் பாசாங்கு செய்தாளே!
நோய்போல் கண்ணீர் பெய்தாலே..
எல்லாம் அறிவான் ஐயனோ!
இறைமகன் அவனோ.மெய்யனே!
ஏதும் வினவாமல் புறப்பட்டான்.
சாதுவாக மணிகண்டன் ஏகினான்.
கானகம் புகுந்தான் அரிகர புத்திரன்.
கண்டான் அரக்கியை எதிரே வர
தேவர்கள் துயரை அறிந்தவ னாக
தூர்த்திடத் துணிந்தான்.அரிகரனே!
மணிகண்டன் மேலே அரக்கியோ
மகிசவள் பாய்ந்தாள்.செருக்கியே
வந்ததன் காரியம் முடித்திடவே
வதம் செய்து முடித்தான்.ஐயனே.
தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடி
தேவ ராட்டம் கூடிக் களித்தனர்.
தேவர்கள் தாமே புலிகளாகினர்.
புலிப்பால் கரந்தும் தாமே தந்தனர்
தேவர்கள் தலைவன் தேவேந்திரன் வந்து பணிந்து உள்ளம் நிறைந்தான்.
புலிப்பால் கொண்டு தந்தது கனிந்தான்.
புலியாகத் தானே ஐயனைச் சுமந்தார்.
அரண்மனை வரையும் சவ்வாரியாக
அவருடன் சூழப் புலிகள் சேனை
புலியிடை சவ்வாரி ஐயன் தானை.
புன்னகை செய்து பூரித்தான் மணியன்.
தாயா நடித்து நோயெனத் துடித்தவள்.
வாயில் கண்டு வாயடைத்து நின்றாள்.
புலிப்பால் கண்டு சலிப்பால் வெந்தாள்.
தன்தவ றுணர்ந்து தாளடி பணிந்தாள்.
அவதாரக் காரியம் ஆக்கி முடித்திட்டான்.
வானுலகு ஏகவும் வார்த்தை வந்தது.
சபரிமலைக் காடு தவக்கோல மேடு
கோவில் கட்ட ஆணை யிட்டுமே!
ஏவினான் அம்பால் குறியிட்டான் இடமே!
குறித்த இடத்திலே பொறித்த விதமே
வடித்த கோவிலே சபரிமலைக் காடே!
அழகான இயற்கை அற்புதக் காட்சி
ஐயப்பன் அமர்வில் அவனது மாட்சி.
நலந்தேடு வர்க்கு வலக்கரம் காட்டுவான்
வளந்தரு சாமி குலக்காவல் ஐயப்பன்.
மலைப் பாதை நடக்க நோய்நொடி தீரும்
களைப்பதும் குறைய கஷ்டம் நீறும்.
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
.
க
No comments:
Post a Comment