உள்ளம் ஒரு கோவில்.
திருப்பதி மலையப்பா.
திருவடி துணையப்பா.
இருப்பது நிலையப்பா,--நீ
ஏழையென் மனதப்பா.
உண்டியல் நிறைத்திட்டேன்
உன்னருள் நிரைந்திட்டேன்.
உண்டியும் கொடுத்திட்டேன்--என்
உளம் உன்னில் வைத்திட்டேன்.
அன்னமும் தானமும்
ஆயிரம் செய்திட்டேன்.
எண்ணம் மறந்திட்டேன்--என்றும்
உன்னையே நினைந்திட்டேன்.
தேரது இழுத்திட்டேன்
தெருவெல்லாம் பூவிட்டேன்.
ஊர் வாழ வேண்டிட்டேன்.--சொந்த
உறவுன்னைக் கொணடிட்டேன்.
பட்டுனக்குக் கட்டிட்டேன்.
பொட்டுனக்குத் தொட்டிட்டேன்.
பாட்டுன்னைப் பாடிட்டேன்-- நெஞ்சில்
ஏற்றுன்னைக் கூடிட்டேன்.
ஏழைக்கு உணவிட்டேன்.
வாழ்வுக்கு வழியிட்டேன்.
வறுமைக்கு முடிவிட்டேன்--ஏழை
சிரிப்பினில் உனைக் கண்டேன்.
ஊரெல்லாம் கூட்டிட்டேன்.
ஊர்கோலம் செய்திட்டேன்.
உளக்கோவில் கூரையிட்டேன்--உள்ளம்
நீ வாழ சீரிட்டேன்.
கோவிலும் கட்டிட்டேன்.
கோபுரமும் உயர்த்திட்டேன்.
பாட்டாளிக்குப் பாடு தந்தேன்--கொடும்
பசியாற்றி உன்னைக் கண்டேன்.
மலையேறி வந்திட்டேன்.
இறையுனைத் தேடிட்டேன்.
இறைஞ்சி பாடி அழைத்திட்டேன்--இருப்பு
இதயத்துள் கண்டிட்டேன்.
கொ.பெ.பிச்சை யா.
No comments:
Post a Comment