உள்ளம் என்பது கோவில்
உள்ளம் என்பது கோவில்---அதில்
உள்ளது நீதான் சாமி.
உன்னைத் தொலைத்துத் தேடு-பாவக்
கண்களை மறந்து கூடு.
இல்லை என்பதும் இருக்கின்றது.--அங்கே.
இருப்பதும் நீயே தெரிகின்றது.
இருண்ட உண்மை ஒளிர்கின்றது.—நெஞ்சம்
மருண்ட மாயை தெளிகின்றது.
கலையின் அம்சம் கோவிலது.--ஆசை
அலையும் நெஞ்சின் கூடலது.
தொலையும் பொய்மை ஆவலங்கு---தொலைந்து
தொடரும் மெய்மை தேடலங்கு.
கலையாய் உன்னை இரசித்திடத்தான்.--மெய்மை
நிலையாய் உள்ளம் வசித்திடத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--உந்தன்
அனுபவம் செதுக்கி படிக்கவைத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--உந்தன்
அனுபவம் செதுக்கி படிக்கவைத்தான்.
சத்தியம் வாழும் இத்தரை-காவல்
சட்டமும் மன்றமும் தேவையா?
அறமே ஞானம் கல்வியாம்-ஆனவப்
புறமும் தீய்ந்த செல்வமாம்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment