ஒரு குயிலின் குரல்.—பக்தி மாலை.
அண்டம் முதலோன் ஆகாய வினையவன்
ஆளும் பகவனைத் தேடு-தண்டம்
கற்றதன் பயனது வென்னவோ சொல்வமோ!
பெற்றது போற்றா அறிவு.
உம்மில் உளதாம் இறையை உணர்க
துணியும் நலன்கள் பெறுக!—நம்மில்
உயிர்கள் எல்லாந் தன்னிற் கொள்க
தம்மில் நினைந்துமே நீ தேடு.
தீவினைப் பயன்கள் தீண்டா துனையே
தீர்வினையே இறையெனப் பாடு.
புலன்கள் ஐந்தும் கடந்தான் அவனை
போற்றிட வாழ்வே நாடு
ஒப்பிலாத் தேவன் அடியார்க்கு வறுமை
ஒண்டாப் பிணியது ஓடும்
புண்ணியக் கடலாம் அவனடி தொழுவார்.
பெறுவர்.பேறது வீடும்.
தன்னிலை யற்றத் தலையை வணங்காத்
தலையுந் தலையா மாம்?—இந்நிலைப்
பிறவி மேலுந் தொடரா தொழிய
பற்றுக இறையவன் தாள்.
கவிஞர்.கொ,பெ.பிச்சையா.
No comments:
Post a Comment