மாவிளக்கு அணி வகுப்பு.
மாவிளக்கு அணிவகுப்பு
மாரியம்மன் கோவிலுக்கு.
கொட்டு மேளம் நாதஸ்வரம்
குலவை ஒலி சேர்ந்து வரும்.
வேப்பிலைத் தோரணங்கள்
வீதியெல்லாம் அலங்காரங்கள்
காப்புக் கட்டி சாமி ஆட்டம்
களைகட்டும் கரகாட்டம்.
சாமி கூடி ஆடி வரும்.
ஆசாமிகள் பாடி வரும்.
கேட்டு வேண்டும் வரமெல்லாம்.
நீட்டிக் கை அருள் வழங்கும்.
உனக்குள்ளும் சாமி உண்டும்.
உள்ளிருந்து அது தூண்டும்.
உன்னை தன்னை மறக்கச் செய்யும்.
உன்னில் சாமி தானே ஆகி ஆடி வரும்.
பொங்கலிட வெண்கலமும்
தங்கமாக மின்னலிடும்.
மங்கையர்கள் சுங்கடிகள்
திங்ககளாகக் கூடிவரும்.
விண்சிந்தும் நட்சத்திரங்கள்
பெண்கள் கூட்டம் விசித்திரங்கள்.
கருமேகம் ஓட்டங்களோ !
கார்குழலாம் கூட்டங்களோ!
காளையர் வட்டங்களோ!
வளைய்ர்கள் கூட்டங்களோ!
சேலையர் சித்திரங்களோ!
குலைபடாப் பத்திரங்களோ!
எண்ணக்காளை ரசித்திருப்பர்.
வண்ணப்பெண் இசைந்திருப்பர்.
திண்ணமாய்த் தெரிந்திருப்பர்.
பெண்பார்க்க விழைந்திருப்பர்.
மஞ்சள் நீர் அஞ்சி ஓடும்--
மாப்பிள்ளைகள் தெரு ஓடும்.
கொஞ்சி இளம் வஞ்சி தேடும்—
நெஞ்சழகன் நெஞ்சம் கூடும்.
சொந்தம் எல்லாம் கூடிவரும்
பந்தம் கூடித் தான் மகிழும்.
சொந்தம் பந்தம் தொடர்வதற்கும்
சம்மந்தங்கள் கூடி வரும்.
ஊரெல்லாம் ஒன்று கூடும்.
உள்ப்பகைககள் தானே ஓடும்.
தேர் இழுத்து ஊர் சேரும்.
ஊர் வலுத்து தேர் சேரும்.
நீதிக் கலை நிகழ்ச்சிகளும்.
சேதி விளை ஆட்டங்களும்.
ஓதும் நல் மந்திரங்களும்.
சூது வெல்லும் தந்திரங்களாம்.
வருடம் தோறும் கொண்டாட்டம்.
வாழ்வு அதை நிலை நாட்டும்.
பெருகி வரும் உறவுகளை
பிணைத்து அது தொடராக்கும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment